ஐ.பி.எல். போட்டியில் ஒரு பைசா கூட ஊழல் செய்யவில்லை

ஐ.பி.எல். போட்டி தலைவர் லலித்மோடி மீது ஊழல் புகார் எழுந்ததை அடுத்து அவர் நீக்கப்பட்டார். பின்னர் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதனால் லலித்மோடி வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கிறார். அங்கிருந்தபடி அவர் நிருபர்களுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-

ஐ.பி.எல். போட்டி வளர்ச்சிக்கு நான் முழுமையாக பாடுபட்டேன். ஐ.பி.எல். அணிகளில் எனது நண்பர்கள் பலர் முதலீடு செய்தார்கள். இதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

ஐ.பி.எல். போட்டியில் நான் எந்த தவறும் செய்ய வில்லை. ஒரு பைசா கூட ஊழலும் செய்யவில்லை.

இந்திய கிரிக்கெட் சங்கத்தில் உறுப்பினர் என்ற முறையில் கிரிக்கெட் சங்க வளர்ச்சிக்கு பாடுபட்டேன். ஐ.பி.எல். மூலம் நான் கொண்டு வந்த திட்டங்களால் கிரிக்கெட் சங்கத்துக்கு ஏராளமாக லாபம் அடைந்தது. அடுத்த 10 ஆண்டில் ரூ. 10 ஆயிரம் கோடி வரை கிரிக்கெட் சங்கத்துக்கு வருமானம் கிடைக்க வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தேன்.

100 சதவீதம் கிரிக்கெட் சங்கத்துக்காகவே உழைத்தேன். இதன் மூலம் நான் எந்த பலனையும் பெற வில்லை.

எனது வளர்ச்சியை கண்டு சிலர் பெறாமை அடைந்தனர். அவர்கள் தான் என்னை சிக்க வைத்துள்ளனர். கிரிக்கெட் சங்கத்தில் எனக்கு எதிரான குழு ஒன்று செயல்படுகிறது. அவரகள் என்னை வீழ்த்த சதி செய்கின்றனர். இந்த விஷயத்தில் இதற்கு மேல் எதையும் சொல்ல விரும்ப வில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

0 comments:

Post a Comment