சச்சின், தோனிக்கு ரூ. 1.84 கோடி

நான்காவது ஐ.பி.எல்., தொடரில் பங்கேற்கும் வீரர்களுக்கு ஏலத் தொகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சச்சின், தோனி, சேவக் போன்றவர்களுக்கு 1.84 கோடி ரூபாய் அடிப்படை விலையாக நிர்ணயித்துள்ளனர். இந்த ஏலத்தில் 62 இந்திய வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இந்தியன் பிரிமியர் லீக் சார்பில் (ஐ.பி.எல்.,) கடந்த மூன்று ஆண்டுகளாக "டுவென்டி-20' தொடர் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இதில் பங்கேற்ற வீரர்களின் ஒப்பந்த காலம் முடிவடைந்ததால், நான்காவது தொடருக்காக வீரர்கள் ஏலம் விரைவில்...

இளம் இந்திய அணி சாதிக்குமா?

இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி இன்று நடக்கிறது. இதில், காம்பிர் தலைமையிலான இளம் இந்திய அணி, அசத்தல் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்றுள்ளது. இரு அணிகள் இடையிலான முதல் போட்டி இன்று கவுகாத்தி, நேரு மைதானத்தில் நடக்கிறது. இம்முறை இந்திய அணியில் சச்சின், சேவக், தோனி, ஜாகிர் கான், ஹர்பஜன் உள்ளிட்ட சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது....

உலககோப்பையை இந்தியா வெல்லும்

2011ம் உலக்கோப்பை கிரிக்கெட் போட்டியை இந்தியா, இலங்கை, வங்கதேசம் ஆகிய நாடுகள் இணைந்து நடத்த உள்ளன. போட்டிகள் தொடங்க இன்னும் ஒருசில மாதங்களே உள்ளன. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் கூறியதாவது:டோனி தலைமையிலான இந்திய அணி உலககோப்பையை வெல்வதற்கான திறமையுடன் உள்ளது. போட்டி நெருங்குவதால் பந்து வீச்சாளர்கள் காயம் ஏற்படாமல் கவனமாக இருக்க வேண்டும். மேலும் அணி சமபலத்துடன் இருப்பதில் கூடுதல் அக்கறை எடுத் துக்கொள்ள வேண்டும்.ஒட்டுமொத்த...

ஐ.பி.எல். போட்டியில் ஒரு பைசா கூட ஊழல் செய்யவில்லை

ஐ.பி.எல். போட்டி தலைவர் லலித்மோடி மீது ஊழல் புகார் எழுந்ததை அடுத்து அவர் நீக்கப்பட்டார். பின்னர் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனால் லலித்மோடி வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கிறார். அங்கிருந்தபடி அவர் நிருபர்களுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:- ஐ.பி.எல். போட்டி வளர்ச்சிக்கு நான் முழுமையாக பாடுபட்டேன். ஐ.பி.எல். அணிகளில் எனது நண்பர்கள் பலர் முதலீடு செய்தார்கள். இதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஐ.பி.எல். போட்டியில் நான் எந்த தவறும் செய்ய வில்லை. ஒரு பைசா கூட ஊழலும் செய்யவில்லை. இந்திய கிரிக்கெட் சங்கத்தில் உறுப்பினர் என்ற...

ஐ.பி.எல். போட்டியில் இருந்து கொச்சி அணி விலகல்

ஐ.பி.எல் போட்டி சீசன் 4-ல் புதிதாக சேர்க்கப்பட்ட கொச்சி அணி பங்குகள் பிரச்னைகள் சிக்கி தவித்தது. 27-ந்தேதிக்குள் யார் யாருக்கு எவ்வளவு பங்குகள் உள்ளன என்ற விவரங்களை வரும் அளிக்க வேண்டும் என பிசிசிஐ இறுதி கெடு விதித்தது. இந்த அவகாசம் முடிவடைய இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் கொச்சி அணி நிர்வாகம் தரப்பில் பிசிசிஐக்கு நேற்று ஒரு கடிதம் எழுதப்பட்டுள்ளது. அதில், ஐபிஎல் சீசன் 4-ல் இருந்து விலகிக்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த தகவலை பிசிசிஐயும் உறுதி...

ரெய்னாவுக்கு ஓய்வு தேவை; டோனி

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. அகமதாபாத்தில் நடந்த முதல் டெஸ்டும், ஐதராபாத்தில் நடந்த 2-வது டெஸ்டும் “டிரா” ஆனது. நாக்பூரில் நடந்த 3-வது மற்றும் கடைசி டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 198 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த டெஸ்ட் தொடரில் சுரேஷ் ரெய்னாவின் ஆட்டம் மிகவும் கவலை அளிக்கும் வகையில் இருந்தது. அவரது சராசரி 6.5 ரன்கள் ஆகும். 3 டெஸ்டிலும் சேர்த்து 26 ரன்களே (4இன்னிங்ஸ்) எடுத்துள்ளார்....

புதிய வரலாறு படைத்தார் சோம்தேவ்

ஆசிய விளையாட்டு டென்னிஸ், ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சோம்தேவ் தேவ்வர்மன், முதன் முதலாக தங்கம் வென்று, புதிய வரலாறு படைத்தார்.சீனாவின் குவாங்சு நகரில் 16வது ஆசிய விளையாட்டு போட்டி நடக்கிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் டென்னிசின் பைனல் நடந்தது. இதில் இந்தியாவின் சோம்தேவ் தேவ்வர்மன், உஸ்பெகிஸ்தானின் டெனிஸ் இஸ்டோமினை எதிர்கொண்டார்.இதன் முதல் சுற்றில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய சோம்தேவ், அடுத்தடுத்து கேம்களை வென்று முன்னிலை பெற்றார். முடிவில் 6-1 என எளிதாக...

பாகிஸ்தானை மீண்டும் வீழ்த்தியது இந்தியா

ஆசிய விளையாட்டு ஹாக்கியில் பாகிஸ்தானை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய இந்திய அணி, அரையிறுதிக்கு முன்னேறியது.சீனாவின் குவாங்சு நகரில் ஆசிய விளையாட்டு போட்டி நடக்கிறது. இதில் ஆண்கள் ஹாக்கி "பி' பிரிவில் இன்று நடந்த முக்கிய லீக் போட்டியில், இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதின. இதற்கு முன் இந்த ஆண்டு நடந்த அஸ்லான்ஷா (4-2), உலக கோப்பை (4-1) மற்றும் காமன்வெல்த் போட்டி (7-4) என வரிசையாக மூன்று தொடர்களில் இந்திய அணி, பாகிஸ்தானை வீழ்த்தி இருந்தது. இம்முறை ஆசிய விளையாட்டில் இந்திய அணி, ஹாங்காங்கை 7-0 என்றும், வங்கதேசத்தை 9-0 என்ற கோல் கணக்கிலும் பந்தாடியது....

ஐ.பி.எல். - கொச்சி அணிக்கு பதிலாக அகமதாபாத் அல்லது ராஜ்கோட்

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெகட் போட்டி 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், டெக்கான் சார்ஜர்ஸ், மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், பெங்களூர் ராயல் சேலஞர்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்றன.  முதல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்சும், 2-வது போட்டியில் டெக்கான் சார்ஜர்சும், 3-வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்சும் சாம்பியன் பட்டம் பெற்றது.  4-வது ஐ.பி.எல்....