ஐ.பி.எல். புதிய விதி தெண்டுல்கர் அதிருப்தி

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இதில் பங்கேற்ற 8 அணியும் வீரர்களை பல கோடி கொடுத்து ஏலத்தில் எடுத்தன.

முதல் ஐ.பி.எல். போட் டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், 2-வது ஐ.பி.எல். போட்டியில் டெக்கான் சார்ஜாஸ் அணியும், 3-வது ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்சும் சாம்பியன் பட்டம் பெற்றன.

4-வது ஐ.பி.எல். போட்டி அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நடக்கிறது. இந்தப் போட்டியில் கூடுதலாக கொச்சி, புனே அணிகள் பங்கேற்கின்றன. 10 அணிகள் பங்கேற்பதால் 4-வது ஐ.பி.எல். போட்டி அமைப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்காக புதிய விதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஏற்கனவே விளையாடிய வீரர்களின் ஒவ்வொரு அணியும் 4 வீரர்களே மட்டும் வைத்துக் கொள்ளலாம் என்றும், மற்ற வீரர்கள் அனைவரும் புதிதாக ஏலத் தில் விடப்படுவார்கள் என்றும் விதியில் தெரிவிக்கப்பட்டது.

ஐ.பி.எல்.லின் இந்த புதிய விதிக்கு தெண்டுல்கர் அதிருப்தி தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

அனைத்து அணிகளும் ஏற்கனவே விளையாடிய வீரர்களையே வைத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும். அவர்களை புதிதாக ஏலத்தில் விடும் முடிவு சரி யானது இல்லை.

மும்பை அணியில் இடம் பெற்றுள்ள வீரர்கள் ஒருங்கிணைந்து விளையாடி வருகிறார்கள். இதனால் கடந்த முறை 2-வது இடத்தை பிடிக்க முடிந்தது. எங்களது கடின உழைப்பால் முன் னேறினோம். புதிதாக அணி வீரர்களை ஒருங்கிணைப்பது என்பது கடினம்.

இவ்வாறு அவர் கூறினார். ஐ.பி.எல். போட்டியின் புதிவிதிகள் குழப்பம் ஏற்படுத்துவதாக உள்ளது என்று கொல்கத்தா அணியின் உரிமையாளரான நடிகர் ஷாருக்கான் ஏற்கனவே கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment