அதிக எதிர்பார்ப்பில் சச்சின்

இந்தியாவில் ஆதரவற்ற குழந்தைகளின் முன்னேற்றத்துக்காக, பல தனியார் அமைப்புகள் இணைந்து செயல்படுகிறது.

இவர்கள் இணைந்து வரும் செப்., 26 முதல் அக்., 2 வரை, "கொடுத்து மகிழுங்கள்' (ஜாய் ஆப் கிவ்விங்) என்ற தேசிய இயக்கம் மூலம் பெருமளவு உதவியை திரட்ட உள்ளனர். இதன் தூதராக தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இந்திய கிரிக்கெட்டின் "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின் நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 1989, நவ.,15ம் தேதி சச்சின் இந்திய அணியில் அறிமுகமானார். தொடர்ந்து அசத்தல் பேட்ஸ்மேனாக நீடித்து மாஸ்டர் பேட்ஸ்மேனாக உருவெடுத்த, இவர் எண்ணற்ற சாதனைகளுக்கு சொந்தக்காரர். தனிப்பட்ட முறையில் 200 குழந்தைகளுகளின் கல்வி மற்றும் வளர்ச்சிக்கும் இவர் உதவி வருகிறார்.

இதுதவிர, கடந்த ஆண்டு "கொடுத்து மகிழுங்கள்' என்ற தேசிய அமைப்புடன் இணைந்தும் பெருமளவு உதவிகள் குவிய வழிவகுத்தார். தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இதன் தூதராக நியமிக்கப்பட்ட சச்சின் இதுகுறித்து அவர் கூறியது:

கடந்த ஆண்டு இந்நிகழ்ச்சிக்காக நான் கிரிக்கெட் முகாம் நடத்தினேன். இதில் என்னுடன் நேரத்தை செலவிட அதிக அளவில் ஏலம் கேட்ட, 25 முதல் 30 பேர்கள் பங்கேற்றனர். இதில் பாதி இளைஞர்கள், பாதி வயதானவர்கள். அவர்களுடன் எனது கருத்தை பகிர்ந்து கொண்டேன்.

பேட்டிங்கின் போது எதிர் முனையில் (22 மீ.,தொலைவு) இருந்து 137 கி.மீ., வேகம் முதல் பல வேகங்களில் வரும் பந்தை எதிர்கொள்வது குறித்து கூறினேன். ஆனால் அவர்கள் அதை நம்பவில்லை. மொத்தத்தில் இந்த முகாம் எல்லோருக்கும் மகிழ்ச்சி தருவதாக இருந்தது. ஆனால் இதை மிகைப்படுத்தி விட்டனர்.

இப்போதும் உண்டு:

இந்த ஆண்டு தான் என்ன செய்வது எனத் தெரியவில்லை. ஏனெனில் விரைவில் <உலக கோப்பை உட்பட பல தொடர்கள் வரவுள்ளது. இதனால் நேரம் கிடைப்பது கடினம். இருப்பினும் மக்கள் பலரும் என்னுடன் நேரத்தை செலவிட ஆர்வமாக உள்ளனர். அவர்களுடன் கிரிக்கெட்டை பகிர்ந்து கொள்ள மீண்டும் சிறிய அளவில் முகாம் நடத்த உள்ளேன்.

அதிக எதிர்பார்ப்பு:

ஆனால் இம்முறை அதிக அளவில் தொகையை எதிர்பார்க்கிறேன். அதாவது என்னுடன் நேரம் செலவிட விரும்புவர்கள் அதிக அளவில் ஏலம் கேட்க வேண்டும். ஏனெனில் இந்த ஆண்டு அதிகபட்ச இலக்கு வைத்துள்ளோம். இந்த நிகழ்ச்சிக்கு இந்தியா முழுவதிலும் <உள்ளவர்கள் உதவ வேண்டும். அப்போது எங்களால் பெரிய இலக்கை அடைய முடியும்.

உங்களால் முடியும்:

இந்நிகழ்ச்சி மூலம் நமது மக்களுக்கு <உதவ, உங்களுக்கு நல்ல வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இவ்வளவு தான் தர வேண்டும் என்று யாரையும் சொல்ல மாட்டேன். <ஒரு லட்சம், ஆயிரம், நூறு அல்லது ஐம்பது ரூபாய் என உங்களால் முடிந்த அளவுக்கு நன்கொடை கொடுத்து <உதவுங்கள். இதனால் உதவி பெறுபவர்கள் முகத்தில் புன்னகையை காணலாம். இது எனக்கு மட்டுமல்ல, உங்களுக்கும் மிகப்பெரிய மகிழ்ச்சியை தரும்.

அதிக ஈடுபாடு:

கிரிக்கெட்டின் மீது தீவிர ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருகிறேன். எனது பள்ளி நாட்களில் இருந்து இப்போது வரை கிரிக்கெட் விளையாடிக் கொண்டுள்ளேன். தவிர, இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்ற கனவும் நிறைவேறியது. மீதமுள்ள நேரங்களில் இதுபோன்ற வளர்ச்சிப் பணிகளுக்கு <உதவுவது மகிழ்ச்சி தான்.

விவரிக்க முடியாது:

இதேபோல மைதானத்தில் என்னை பாராட்டி, எனது பெயரை உச்சரிக்கும் போதும் மகிழ்ச்சி ஏற்படும். இதை விவரிப்பது என்பது மிகவும் கடினமானது. இதுபோன்ற செயல்கள் தான் கிரிக்கெட் வீரரின் வளர்ச்சிக்கு உதவும். அவர்களை எப்போதும் சிறப்பாக சாதிக்க தூண்டும்.
ஓய்வு இல்லை:

கிரிக்கெட்டில் இருந்து இப்போதைக்கு ஓய்வு பெறும் எண்ணமில்லை. ஒருவேளை அப்படி ஒரு திட்டம் இருந்தால், உங்கள் அனைவருக்கும் தெரியப்படுத்துவேன். தற்போதைக்கு கிரிக்கெட்டில் ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறேன். மற்றபடி வேறு எந்த எண்ணமும் இல்லை.
இவ்வாறு சச்சின் கூறினார்.

0 comments:

Post a Comment