ஐ.சி.சி., விருது: சச்சினுக்கு வாய்ப்பு

ஐ.சி.சி., விருதுக்கான இறுதிப் பட்டியலில் சச்சின், சேவக் உள்ளிட்ட இந்திய நட்சத்திரங்கள் இடம் பெற்றுள்ளனர்.


சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில் ஆண்டு தோறும் விருது வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான விருது வழங்கும் விழா பெங்களூருவில் அடுத்த மாதம் 6ம் தேதி நடக்கிறது. இதில் ஒன்பது வகையான விருதுகள் வழங்கப்பட உள்ளன. இவ்விருதுகளுக்காக பரிந்துரை செய்யப்பட்ட வீரர்களின் பட்டியல் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதன் இறுதிப் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.


இதில், ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் டெஸ்ட் வீரர் என இரண்டு பிரிவுகளில் சச்சின், சேவக் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சிறந்த ஒருநாள் போட்டிக்கான வீரர்கள் பட்டியலில் சச்சின் இடம் பெற்றுள்ளார். இவருக்கு ஏதாவது ஒரு விருது கிடைக்க வாய்ப்பு உள்ளது. கேப்டன் தோனி, இறுதி பட்டியலில் எந்த ஒரு விருதுக்கும் தேர்வு செய்யப்படவில்லை.


சிறந்த கிரிக்கெட் வீரருக்கான பட்டியலில் இங்கிலாந்தின் சுவான், சிறந்த டெஸ்ட் வீரருக்கான பட்டியலில் தென் ஆப்ரிக்காவின் டேல் ஸ்டைன் இடம் பிடித்துள்ளனர். சிறந்த ஒருநாள் போட்டிக்கான வீரர்கள் பட்டியலில் தென் ஆப்ரிக்காவின் டிவிலியர்ஸ், ஆஸ்திரேலியாவின் வாட்சன், ரேயான் ஹாரிஸ் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.
சிறந்த "டுவென்டி-20' போட்டி வீரருக்கான பட்டியலில் ஆஸ்திரேலியாவின் மைக்கேல் ஹசி, இலங்கையின் மகிலா ஜெயவர்தனா, தென் ஆப்ரிக்காவின் ரேயான் மெக்லாரன், நியூசிலாந்தின் பிரண்டன் மெக்கலம் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

0 comments:

Post a Comment