சூதாட்டத்தில் 29 கிரிக்கெட் வீரர்களுக்கு தொடர்பு

தென் ஆப்பிரிக்காவில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டி சூதாட்டத்தில், 29 கிரிக்கெட் வீரர்களுக்கு தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


லண்டனில் இருந்து வெளிவரும் "த சண்டே டைம்ஸ்" பத்திரிகையில் இத்தகவல் வெளியாகியுள்ளது.


ஐசிசி.,யின் ஊழல் தடுப்பு பிரிவு தயாரித்த இந்த முறைகேடு பட்டியலில் பல பிரபல வீரர்கள் இடம்பெற்றுள்ளதாகவும், இதில் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் வீரர்கள் யாரும் இல்லை என்றும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.


சில சூதாட்ட முறைகள் மர்மமான முறையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

0 comments:

Post a Comment