சென்னை சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி

சாம்பியன்ஸ் `லீக்' 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது.இன்று நடந்த 2-வது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- வயம்பா (இலங்கை) அணிகள் மோதின.


இதில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்கள் எடுத்தது.


அதிகபட்சமாக சுரேஷ் ரெய்னா 44 பந்துகளில் 6 பவுண்டரிகள், 6 சிக்சருடன் 87 ரன்கள் எடுத்தார். முரளி விஜய் 46 பந்துகளில் 9 பவுண்டரிகள், ஒரு சிக்சருடன் 68 ரன்கள் எடுத்தார். பின்னர் களம் இறங்கிய வயம்பா அணி 17.1 ஓவரில் 103 ரன்களுக்கு அல் அவுட்டானது.


இதையடுத்து சென்னை அணி 98 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக கருணாநாயகே 31 பந்துகளில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சருடன் 25 ரன் எடுத்தார்

0 comments:

Post a Comment