மீண்டும் "ஈடன் கார்டன்' சாதனை

கடந்த 2001ல் ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த டெஸ்டில், இரட்டை சதமடித்து வெற்றிக்கு வித்திட்டது போல, இம்முறை மீண்டும் சாதிப்பேன்,'' என, இந்திய வீரர் லட்சுமண் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.கடந்த 2001ல் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் கோல்கட்டா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்தது. இதில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 445 ரன்கள் எடுத்தது. பின்னர் முதல் இன்னிங்சை துவக்கிய இந்திய அணி 171 ரன்களுக்கு சுருண்டு, "பாலோ-ஆன்' பெற்றது. பின்னர் 2வது இன்னிங்சை துவக்கிய இந்திய அணிக்கு லட்சுமண் (281), டிராவிட் (180) கைகொடுத்தனர். இந்திய அணி 2வது இன்னிங்சில்...

காமன்வெல்த்: குறைகளை சரிகட்டும் நேரம்

ஒலிம்பிக் போன்ற போட்டிகளை நடத்த வேண்டும் என்று இந்தியா இனி விரும்பினால் கூட, இந்த காமன்வெல்த் போட்டிகள் அதற்கு கரும்புள்ளியாக இருக்கும் என்பதால், விளையாட்டுத் துறையில் ஆர்வம் கொண்டவர்கள் வருத்தத்தில் உள்ளனர். ஊழல், நிர்வாகிகளிடையே ஒற்றுமையின்மை, சர்வதேச தரத்தில் அரங்குகளையும், தங்குமிடம் வசதிகளை செய்யாதது உள்ளிட்டவை, எதிர்காலத்தில், இந்தியாவுக்கு கெட்ட பேரை ஏற்படுத்தித் தருவதாக அமைந்துவிட்டன.விளையாட்டைத் துவக்கி வைப்பது, இளவரசர் சார்லசா அல்லது இந்திய ஜனாதிபதியா என்ற கேள்விக்கு இன்று வரை விடை இல்லை. ஊழல் எனும் விஷயம்தான், ஏற்பாடுகளில் உள்ள குளறுபடிகளுக்கு...

காமன்வெல்த் போட்டி: வீரர்களை மிரட்டிய பாம்பு

காமன்வெல்த் போட்டியில் இன்னொரு அதிர்ச்சி. இம்முறை வீரர்கள் தங்கும் அறையில் பாம்பு ஓடுவதை பார்த்து, தென் ஆப்ரிக்க குழுவினர் மிரண்டு போயுள்ளனர். வீரர்களின் உயிரை பணயம் வைத்து, விளையாட்டு கிராமத்தில் தங்க முடியாது என, அதிரடியாக தெரிவித்துள்ளனர். டில்லியில் காமன்வெல்த் விளையாட்டு போட்டி வரும் அக்டோபரில்( 3-14) நடக்க உள்ளது. இதற்காக சுமார் ரூ. 70 ஆயிரம் கோடி வரை செலவு செய்யப்பட்டுள்ளது. இதில், பெருமளவு ஊழல் நடந்துள்ளது. தரமற்ற கட்டுமானப் பொருட்கள் பயன்படுத்தப்பட்டதால், ஜவஹர்லால் நேரு மைதானத்தின் மேற்கூரை, நடைமேம்பாலம் போன்றவை இடிந்து விழுந்தன.நிலைமை...

நிகரற்ற வீரர் சச்சின்

ஐ.சி.சி., விருதுகளை வைத்து சச்சின் டெண்டுல்கரின் சாதனைகளை அளவிட முடியாது. அவர் நிகரற்ற வீரர்,'' என, யுவராஜ் தெரிவித்தார்.கிரிக்கெட் அரங்கில் 20 ஆண்டுகளாக அசத்தி வருகிறார் இந்திய மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர். டெஸ்ட் (169 போட்டி, 13837 ரன்கள்) மற்றும் ஒரு நாள் போட்டிகளில் (442 போட்டி, 17598 ரன்கள்) அதிக ரன்கள் குவித்து சாதனை படைத்தவர். பல்வேறு சாதனைகளை படைத்தும், இதுவரை "கிரிக்கெட் ஆஸ்கர்' என அழைக்கப்படும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) விருது இன்னும் பெற வில்லை. இது குறித்து சக வீரர் யுவராஜ் சிங் கூறியது: ஐ.சி.சி., விருது களை...

இந்திய அணிக்கு நெருக்கடி: கங்குலி

உலககோப்பை கிரிக்கெட் தொடரில் (2011), இந்திய அணிக்கு கடும் நெருக்கடி காத்திருக்கிறது, என சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.அடுத்த ஆண்டு உலககோப்பை கிரிக்கெட் தொடரை (50 ஓவர்), இந்தியா, இலங்கை, வங்கதேச அணிகள் இணைந்து நடத்துகின்றன. பிப்ரவரி 19 ம் தேதி தொடர் துவங்குகிறது. பைனல் போட்டி ஏப். 2 ல் நடக்கிறது.கடந்த 1983 ம் ஆண்டு உலககோப்பை தொடரில் கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி கோப்பை வென்று சாதித்தது. அதற்குப் பின் நடந்த 6 உலககோப்பை தொடர்களில் இந்திய அணி கோப்பை கைப்பற்ற வில்லை. அடுத்த ஆண்டு சொந்த மண்ணில் நடக்க உள்ள உலககோப்பை தொடரில், கோப்பை வெல்ல அதிக வாய்ப்பு...

சவாலான இந்திய தொடர்

வலிமையான பேட்டிங் வரிசை கொண்ட இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர், எப்போதுமே சவால் நிறைந்தது,'' என, ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிட்சல் ஜான்சன் தெரிவித்துள்ளார்.இரண்டு டெஸ்ட் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க, ஆஸ்திரேலிய அணி இந்தியா வந்துள்ளது. வரும் 25ம் தேதி இந்திய பிரசிடென்ட் லெவன் அணியுடன், 3 நாள் பயிற்சி போட்டியில் விளையாடுகிறது. இத்தொடர் குறித்து ஜான்சன் கூறியது:இந்திய அணிக்கு சச்சின், டிராவிட் மற்றும் சேவக், பேட்டிங் வரிசையிலும், பவுலிங்கில் ஹர்பஜனும் வலு சேர்க்கின்றனர். இவர்களுக்கு எதிராக விளையாடுவதே, மிகவும்...

சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட்: வாரியர்ஸ் அணிக்கு வெற்றி இலக்கு 137

தென் ஆப்பிரிக்காவில் நடைபெறும் சாம்பியன்ஸ் லீக் கிரி‌க்கெட் டுவென்டி- 20, போட்டியின் 20 வது ‌தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் வாரியர்ஸ் அணியும் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி களமிறங்கிய ‌சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவரில் 6 விக்‌கெட் இழப்பிற்கு 136 ரன்கள் எடுத்த...

ஐ.பி.எல். புதிய விதி தெண்டுல்கர் அதிருப்தி

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இதில் பங்கேற்ற 8 அணியும் வீரர்களை பல கோடி கொடுத்து ஏலத்தில் எடுத்தன. முதல் ஐ.பி.எல். போட் டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், 2-வது ஐ.பி.எல். போட்டியில் டெக்கான் சார்ஜாஸ் அணியும், 3-வது ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்சும் சாம்பியன் பட்டம் பெற்றன. 4-வது ஐ.பி.எல். போட்டி அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நடக்கிறது. இந்தப் போட்டியில் கூடுதலாக கொச்சி, புனே அணிகள் பங்கேற்கின்றன. 10 அணிகள் பங்கேற்பதால் 4-வது ஐ.பி.எல். போட்டி அமைப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்காக...

ஐ.சி.சி., விருது: சச்சினுக்கு வாய்ப்பு

ஐ.சி.சி., விருதுக்கான இறுதிப் பட்டியலில் சச்சின், சேவக் உள்ளிட்ட இந்திய நட்சத்திரங்கள் இடம் பெற்றுள்ளனர். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில் ஆண்டு தோறும் விருது வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான விருது வழங்கும் விழா பெங்களூருவில் அடுத்த மாதம் 6ம் தேதி நடக்கிறது. இதில் ஒன்பது வகையான விருதுகள் வழங்கப்பட உள்ளன. இவ்விருதுகளுக்காக பரிந்துரை செய்யப்பட்ட வீரர்களின் பட்டியல் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதன் இறுதிப் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.இதில்,...

ஆஸி. தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு

ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், யுவராஜ் நீக்கப்பட்டுள்ளார்.இன்று வெளியிடப்பட்ட 15 பேர் கொண்ட பட்டியலில், புஜாராவின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.யுவராஜ் நீக்கப்பட்டது குறித்து கிரிக்கெட் தேர்வுக் குழுத் தலைவர் ஸ்ரீகாந்திடம் செய்தியாளர்கள் கேட்டபோது, "இதற்கு குறிப்பிட்ட காரணம் எதுவும் இல்லை. ஆட்டத்திறன் மற்றும் உடல்தகுதியை மட்டுமே கருத்தில் கொண்டு வீரர்கள் தேரவு செய்யப்பட்டுள்ளனர்." என்றார்.ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டித் தொடர் மொஹாலியில் அக்டோபர் 1-ம் தேதி தொடங்குகிறது.அணி வீரர்கள்:எம்.எஸ். டோனி (கேப்டன்),...

சடுகுடு சக்கரவர்த்தி

கபடி என்று அழைக்கப்படும் சடுகுடு விளையாட்டு தமிழகத்தில்தான் உருவானது என்றாலும் இந்த விளையாட்டு இந்தியா முழுவதும் குறிப்பாக கிராமங்களில் அதிகம் விளையாடப்படுகிறது. இந்தியாவில் மட்டுமல்லாமல் தெற்காசிய நாடுகளிலும் ஜப்பான், ஈரான் போன்ற நாடுகளுக்கும் இந்த விளையாட்டு பரவியுள்ளது. வங்கதேச நாட்டின் தேசிய விளையாட்டாகவும், இந்தியாவில் தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் மாநில விளையாட்டாகவும் உள்ளது கபடி. தமிழர் விளையாட்டான கபடியில் இந்தியாவின் மற்ற மாநிலத்தவர்களைக் காட்டிலும் பஞ்சாபியர்கள் அதிகம் ஈடுபாடு கொண்டுள்ளனர். பஞ்சாபைச்...

கிரிக்கெட்டை சீர்குலைக்கும் சூதாட்டம்

கிரிக்கெட்டுக்கு "ஜென்டில் மேன்' விளையாட்டு என்ற பெயர் உள்ளது. போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கு சம்பளம் அதிகம். ஒரு போட்டிக்கு 2 லட்சம் வரை வீரர்கள் சம்பாதிக்கிறார்கள். தவிர, விளம்பர வருமானம் கோடிக் கணக்கில் கொட்டுகிறது. இவ்வளவு பணம் சம்பாதித்தும், ஒரு சில கிரிக்கெட் வீரர்களுக்கு இது போதவில்லை. "மேட்ச் பிக்சிங்', "ஸ்பாட் பிக்சிங்' என பல சூதாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் மூலம் ஒரே போட்டியில், பல கோடி ரூபாய் சம்பாதிக்கின்றனர். பார்ம் இருந்தால் மட்டுமே, கிரிக்கெட் விளையாட முடியும். தவிர, அணியிலும் வாய்ப்பு கிடைக்கும். இதனால் அணியில் வாய்ப்பு...

சென்னை சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி

சாம்பியன்ஸ் `லீக்' 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது.இன்று நடந்த 2-வது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- வயம்பா (இலங்கை) அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சுரேஷ் ரெய்னா 44 பந்துகளில் 6 பவுண்டரிகள், 6 சிக்சருடன் 87 ரன்கள் எடுத்தார். முரளி விஜய் 46 பந்துகளில் 9 பவுண்டரிகள், ஒரு சிக்சருடன் 68 ரன்கள் எடுத்தார். பின்னர் களம் இறங்கிய வயம்பா அணி 17.1 ஓவரில் 103 ரன்களுக்கு அல் அவுட்டானது. இதையடுத்து சென்னை...

மேற்கிந்தியத் தீவுகளின் ஆல்ரவுண்டர்...

கிரிக்கெட்டில் பேட்டிங், பந்து வீச்சு, பீல்டிங் என அனைத்திலும் சிறந்து விளங்கியவர் மேற்கிந்தியத் தீவுகளின் கார்ல் ஹுப்பர்.21 ஆண்டுகள் அந்த அணிக்காக சர்வதேச போட்டிகளில் விளையாடி உள்ளார். ÷ஹுப்பர் கயானாவில் உள்ள பிரிட்ஜ்டவுனில் 1966-ம் ஆண்டு டிசம்பர் 15-ம் தேதி பிறந்தார். தொடக்கத்தில் கயானா அணிக்காக கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றார்.பின்னர் 1987-ம் ஆண்டு தேசிய அணியில் இடம் பிடித்தார்.1987-ம் ஆண்டு மார்ச்சில் நியூஸிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் முதன் முறையாக களமிறங்கினார் ஹுப்பர். அதே ஆண்டு டிசம்பரில் மேற்கிந்திய தீவுகள் -இந்தியாவுக்கு...

சூதாட்டத்தில் 29 கிரிக்கெட் வீரர்களுக்கு தொடர்பு

தென் ஆப்பிரிக்காவில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டி சூதாட்டத்தில், 29 கிரிக்கெட் வீரர்களுக்கு தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.லண்டனில் இருந்து வெளிவரும் "த சண்டே டைம்ஸ்" பத்திரிகையில் இத்தகவல் வெளியாகியுள்ளது.ஐசிசி.,யின் ஊழல் தடுப்பு பிரிவு தயாரித்த இந்த முறைகேடு பட்டியலில் பல பிரபல வீரர்கள் இடம்பெற்றுள்ளதாகவும், இதில் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் வீரர்கள் யாரும் இல்லை என்றும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.சில சூதாட்ட முறைகள் மர்மமான முறையில் இருப்பதாகவும் கூறப்படுகிற...

அதிக முறை "டக்' விக்கெட் எடுத்தவர்

கிரிக்கெட்டில் டெஸ்ட் போட்டிகளில் அதிக வீரர்களை (104) டக் அவுட் ஆக்கியவர் என்ற சாதனைக்குரியவர் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் கிளென் மெக்ரத். வசீகரமான மிதவேகப் பந்து வீச்சின் மூலம் எதிரணி வீரர்களையும் கவர்ந்தவர்.மெக்ரத், ஆஸ்திரேலியாவில் உள்ள நியூ செüத்வேல்ஸில் 1970-ம் ஆண்டு பிப்ரவரி 9-ம் தேதி பிறந்தார். 1993-ல் நியூ செüத்வேல்ஸ் அணிக்காக முதன் முறையாக கிரிக்கெட்டில் களமிறங்கினார். அதற்கு அடுத்த ஆண்டே ஆஸ்திரேலிய தேசிய அணியில் இடம் பிடித்தார்.1993 நவம்பரில் நடைபெற்ற ஆஸ்திரேலியா- நியூசிலாந்து டெஸ்ட் தொடரே மெக்ரத்துக்கு முதல் சர்வதேச போட்டியாகும்....

அர்ப்பணிப்புடன் விளையாடுகிறேன்: சச்சின்

கிரிக்கெட் அரங்கில் காலடி வைத்த நாள் முதல், இன்று வரை அர்ப்பணிப்பு உணர்வுடன் விளையாடி வருகிறேன்,'' என, சச்சின் தெரிவித்தார். சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20' தொடரில் பங்கேற்க தென் ஆப்ரிக்கா சென்றுள்ளார் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின். இத்தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியை வழிநடத்த உள்ள இவர், கோப்பை வெல்ல காத்திருக்கிறார்.கடந்த 20 ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாடி வருவது குறித்து சச்சின் கூறியது: நான் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்த நாள் முதலாக, இன்று வரை அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டு வருகிறேன். நான் கிரிக்கெட்டை மதிக்கிறேன். எங்கே சென்று விளையாடுகிறோம்...

ரிவர்ஸ் ஸ்விங் பந்துவீச்சில் சிறந்தவர்

ரிவர்ஸ் ஸ்விங் பந்துவீச்சு முறையின் மூலம் கிரிக்கெட்டில் தனி முத்திரைப் பதித்தவர் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் வக்கார் யூனிஸ். தான் விளையாடிய காலங்களில் சக வீரர் வாசிம் அக்ரமுடன் ஜோடி சேர்ந்து எதிரணி வீரர்களுக்கு சிம்மசொப்பனமாக திகழ்ந்தார் என்றால் அது மிகையாகாது.பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள வெஹாரியில் 1971-ம் ஆண்டு நவம்பர் 16-ம் தேதி பிறந்தார் யூனிஸ். ஒரு நாள் போட்டியில் 416 விக்கெட்டுகள், டெஸ்ட் போட்டியில் 373 விக்கெட்டுகளை வீழ்த்தி கிரிக்கெட் வரலாற்றில் என்றும் நினைவுகூரத்தக்க வீரராக விளங்குகிறார்.1989-ம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்த...

அதிக எதிர்பார்ப்பில் சச்சின்

இந்தியாவில் ஆதரவற்ற குழந்தைகளின் முன்னேற்றத்துக்காக, பல தனியார் அமைப்புகள் இணைந்து செயல்படுகிறது. இவர்கள் இணைந்து வரும் செப்., 26 முதல் அக்., 2 வரை, "கொடுத்து மகிழுங்கள்' (ஜாய் ஆப் கிவ்விங்) என்ற தேசிய இயக்கம் மூலம் பெருமளவு உதவியை திரட்ட உள்ளனர். இதன் தூதராக தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இந்திய கிரிக்கெட்டின் "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 1989, நவ.,15ம் தேதி சச்சின் இந்திய அணியில் அறிமுகமானார். தொடர்ந்து அசத்தல் பேட்ஸ்மேனாக நீடித்து மாஸ்டர் பேட்ஸ்மேனாக உருவெடுத்த, இவர் எண்ணற்ற சாதனைகளுக்கு சொந்தக்காரர். தனிப்பட்ட முறையில்...