தென் ஆப்ரிக்காவை வீழ்த்துவோம் *காம்பிர் நம்பிக்கை

டெஸ்ட் தொடரில் அனுபவ வீரர் டிராவிட் இல்லாதது பின்னடைவு. இவர் இல்லாத நிலையலும், தென் ஆப்ரிக்காவை வீழ்த்துவோம்,'' என, இந்திய வீரர் காம்பிர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் வரும் 6ம் தேதி நாக்பூரில் துவங்குகிறது. இதுகுறித்து சென்னையில் நடந்த தனியார் விளம்பர நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற இந்திய வீரர் காம்பிர் கூறியதாவது:

வங்கதேச தொடரை கைப்பற்றியதன்மூலம், இந்திய அணி 2010ம் ஆண்டை வெற்றியுடன் துவக்கியுள்ளது. இந்த வெற்றிநடை அடுத்து வரவுள்ள தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் தொடரும் என நம்புகிறேன்.

இத்தொடரில் காயம் காரணமாக அனுபவ வீரர் டிராவிட் பங்கேற்காதது, இந்திய அணிக்கு சற்று பின்னடைவு. இருப்பினும், தென் ஆப்ரிக்காவை வீழ்த்தி, கோப்பை வெல்ல அதிக வாய்ப்பு உள்ளது.
தென் ஆப்ரிக்க அணியின் வேகப்பந்துவீச்சு வலுவான நிலையில் உள்ளது.

எனவே இந்திய பேட்ஸ்மேன்கள் மிகுந்த கவனமுடன் விளையாட வேண்டும். சமீபகாலமாக இந்திய அணியின் வேகப்பந்துவீச்சு எழுச்சி கண்டுள்ளது. ஜாகிர் கான், இஷாந்த் சர்மா, ஸ்ரீசாந்த் உள்ளிட்டோர் துல்லியமாக பந்துவீசுகின்றனர்.

எனவே இந்திய வீரர்கள் ஒருங்கிணைந்து முழுதிறமையை வெளிப்படுத்தும் பட்சத்தில், தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றி, "நம்பர்-1' அணி என்பதை நிரூபிக்கலாம்.
இவ்வாறு காம்பிர் கூறினார்.

0 comments:

Post a Comment