முதலிடத்தில் நீடிக்குமா இந்தியா?

தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றும் பட்சத்தில் டெஸ்ட் ரேங்கிங் பட்டியலில் தொடர்ந்து "நம்பர்-1' இடத்தில் நீடிக்கலாம்.

தவிர, ஆண்டின் சிறந்த டெஸ்ட் அணிக்கான சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வழங்கும் விருது மற்றும் பரிசுத் தொகையை தட்டிச் செல்லலாம்.

டெஸ்ட் அரங்கில் "நம்பர்-1' இடத்தை கைப்பற்ற இந்தியா மற்றும் தென் ஆப்ரிக்கா அணிகளுக்கு இடையில் கடும் போட்டி நடக்கிறது. தற்போது இந்திய அணி 125 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. தென் ஆப்ரிக்கா இரண்டாவது (120 புள்ளிகள்) இடத்தில் உள்ளது.

நேற்று துவங்க உள்ள இவ்விரு அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரில், தென் ஆப்ரிக்கா 1-0 என்ற கணக்கில் வெல்லும் பட்சத்தில் 123 புள்ளிகள் பெறும். அதே சமயம் இந்தியா 122 புள்ளிகளை பெறும். தென் ஆப்ரிக்கா 2-0 என்ற கணக்கில் இந்தியாவை வீழ்த்தினால் 125 புள்ளிகளுடன் "நம்பர்-1' இடத்தை தன்வசப்படுத்தும். இந்திய அணி 120 புள்ளிகளுடன் 2 வது இடத்துக்கு தள்ளப்படும்.


ஆண்டின் சிறந்த அணி:

இத்தொடரில் இந்திய அணி 2-0 கணக்கில் தென் ஆப்ரிக்காவை வீழ்த்தினால், 127 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் நீடிக்கும். தென் ஆப்ரிக்கா 116 புள்ளிகள் பெறும். டெஸ்ட் தொடர் "டிரா' ஆகும் பட்சத்தில் ரேங்கிங் பட்டியலில் எந்த மாற்றமும் இருக்காது.

வரும் ஏப். 1ம் தேதி வரை, இந்தியா முதலிடத்தில் நீடித்தால் ஐ.சி.சி., வழங்கும் ஆண்டின் சிறந்த டெஸ்ட் அணிக்கான விருதும், பரிசுத் தொகையாக ரூ. 81 லட்சமும் வெல்லலாம்.

ஆஸ்திரேலியாவுக்கு வாய்ப்பு:

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழக்கும் பட்சத்தில் தென் ஆப்ரிக்கா அணி 116 புள்ளிகள் பெற்று மூன்றாவது இடத்துக்கு தள்ளப்படும். அதே சமயம் 2 வது இடத்துக்கு முன்னேறும் ஆஸ்திரேலிய அணி (118), ஐ.சி.சி., வழங்கும் ரூ. 35 லட்சம் பரிசுத் தொகை வெல்லலாம்.

வரும் ஏப்., 1 ம் தேதிக்குள் வங்கதேசம்-இங்கிலாந்து, ஆஸ்திரேலியா-நியூசிலாந்து அணிகள் தலா 2 டெஸ்ட் போட்டிகளில் மோதுகின்றன. இப்போட்டிகளின் முடிவுகள், "நம்பர்-1' இடத்துக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்த வாய்ப்பு இல்லை

0 comments:

Post a Comment