உலககோப்பை தொடர் இடமாற்றம்

பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக இந்திய துணைக் கண்டத்தில் உலககோப்பை (50 ஓவர்) கிரிக்கெட் தொடர் நடப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்தியா, வங்கதேசம் மற்றும் இலங்கையில் அடுத்த ஆண்டு உலககோப்பை (50 ஓவர்) கிரிக்கெட் போட்டிகள் நடக்க உள்ளன. இந்நிலையில் இந்தியாவில் நிலவி வரும் பாதுகாப்பு அச்சுறுத்தல், உலகின் மற்ற அணிகளுக்கு பீதியை ஏற்படுத்தி உள்ளது.

இதனால் உலககோப்பை தொடர், திட்டமிட்ட படி, இந்திய துணைக் கண்டத்தில் நடக்குமா என்பதில் சந்தேகம் நீடிக்கிறது.

இது குறித்து நியூசிலாந்து கிரிக்கெட் போர்டு தலைவர் ஜஸ்டின் வான் கூறியது: இந்தியாவில் பாதுகாப்பு தொடர்பாக அச்சுறுத்தல் நிலவி வருகிறது. இது மேலும் அதிகரித்தால் உலககோப்பை போட்டிகளை அங்கு நடத்துவதில் சிக்கல் ஏற்படும். போட்டிகள் துவங்கும் சமயத்தில் வேறு இடத்தை தேடிக் கொண்டிருக்க முடியாது.

ஒருவேளை இத்தொடருக்கான இடம் மாற்றப்பட்டால், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அல்லது தென் ஆப்ரிக்காவில் நடைபெற அதிக வாய்ப்புகள் உள்ளன.

கிரிக்கெட்டின் இதயத்துடிப்பே ஆசியா தான். இருப்பினும் போதுமான பாதுகாப்பு இல்லை என்றால் உலககோப்பையில் மற்ற அணி வீரர்கள் பங்கேற்பதில் சிக்கல் ஏற்படும். உலககோப்பை போட்டிகளை நடத்தும் நாடுகள், போதுமான பாதுகாப்பு உறுதி அளிக்க வேண்டும்.

தவிர, அதற்கான திட்டங்களை விளக்கிக் காட்ட வேண்டும். அதற்குப் பின் தான் உலககோப்பையில் பங்கேற்பது குறித்து முடிவு எடுக்கப்படும். ஈராக் உள்ளிட்ட உலகின் எந்த நாடாக இருந்தாலும், பாதுகாப்பு உறுதி அளித்தால் நியூசிலாந்து அணி பங்கேற்கும். இவ்வாறு வான் தெரிவித்தார்.

0 comments:

Post a Comment