
ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் புதிய விதிமுறைகள் 2011–ம் ஆண்டு அக்டோபர் மாதம் அமல்படுத்தப்பட்டது.
பீல்டிங் கட்டுப்பாட்டு, 2 புதிய பந்துகள் ஆகிய விதிகள் கொண்டு வரப்பட்டது. இரண்டு முனையில் இருந்தும் புதிய பந்துகள் பயன்படுத்தப்பட்டன.
இதனால் சுழற்பந்து வீரர்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக கூறி இந்த விதியை மாற்றுமாறு இந்திய கிரிக்கெட் வாரியம் வலியுறுத்தியது.
பேட்டிங் பவர் பிளேயில் 4 வீரர்கள் மட்டுமே எல்லை கோடு அருகே இருக்க வேண்டும். பேட்டிங் பவர் பிளேயை 16 முதல் 40 ஓவருக்குள் எடுக்க வேண்டும்.
இந்த புதிய விதிக்கு இந்தியாவோடு, பாகிஸ்தான், வங்காளதேசம் ஆகிய நாடுகளும் எதிர்த்தன. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, ஜிம்பாப்வே ஆதரித்தன. வெஸ்ட்இண்டீஸ், தென்ஆப்பிரிக்கா நடுநிலை வகித்து உள்ளன.
இந்த நிலையில் உலக கோப்பைக்கு முன்பு வரை இந்த விதிமுறையில் மாற்றம் இல்லை என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) அறிவித்துள்ளது.
இதுகுறித்து ஐ.சி.சி.யின் தலைமை நிர்வாகி தேவ் ரிச்சர்ட்சன் கூறியதாவது:–
உலக கோப்பை வரை ஒருநாள் போட்டி விதிமுறையில் மாற்றம் செய்யும் எண்ணம் இல்லை. உலக கோப்பை போட்டி முடிந்த பிறகு தான் ஐ.சி.சி. கூட்டம் கூட்டப்படும். விதியை மாற்றுவது பற்றி மறு ஆய்வு செய்யப்படும்.
20 ஓவர் போட்டிக்கு இணையாக இருக்கும் வகையில் தான் 50 ஓவர் போட்டியில் இந்த புதிய விதி கொண்டு வரப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment