இந்தியா, துபாய், வங்கதேசத்தில் பிரிமியர் தொடர்

ஏழாவது பிரிமியர் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், வங்கதேசம், இந்தியா என 3 நாடுகளில் நடக்கவுள்ளது.

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் பிரிமியர் ‘டுவென்டி–20’ போட்டி தொடர் நடக்கிறது. 

அடுத்த மாதம் லோக்சபா தேர்தல் துவங்குவதால், இத்தொடருக்கு பாதுகாப்பு வழங்க முடியாது, மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்தது.

இதனால், ஏழாவது தொடர் இந்தியாவில் நடப்பது சந்தேகமாக இருந்தது. 

இந்நிலையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், வங்கதேசம், இந்தியா என 3 நாடுகளில் நடத்த, இந்திய கிரிக்கெட் போர்டு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

ஏழாவது தொடர் வரும் ஏப்., 16ம் தேதி துவங்கி, ஜூன் 1ம் தேதி வரை நடக்கிறது. 

0 comments:

Post a Comment