தோனிக்கு பரிசாக ஒளிரும் ஸ்டம்ப்ஸ்

இந்திய அணி ‘டுவென்டி–20’ உலக கோப்பை வென்றால், கேப்டன் தோனிக்கு, ஒளிரும் ‘ஸ்டம்ப்ஸ்’ பரிசு தர உள்ளனர்.

வங்கதேசத்தில் ஐந்தாவது ‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடர் நடக்கிறது. இப்போட்டிகளின் போது, ஒளிரும் ‘ஸ்டம்ப்ஸ்’ தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.          
                    
இதன்படி விக்கெட் மீது பந்து பட்டதும், ‘பேட்டரியில்’ இயங்கும் எல்.இ.டி விளக்குகள் கொண்ட ‘பெயில்ஸ்’ ஒளிரும். இதில் இருந்து அனுப்பப்படும் ‘ரேடியோ சிக்னல்’ வாயிலாக ஒட்டுமொத்த ‘ஸ்டம்ப்ஸ்’ சிவப்பு நிறத்தில் ஜொலிக்கும்.

இதைக் கண்டுபிடித்த ஆஸ்திரேலியாவின் எக்கெர்மான். இந்த உலக கோப்பை தொடருக்காக 32 ‘ஸ்டம்ப்ஸ்’, 40 ‘பெயில்ஸ்’களை வங்கதேசம் கொண்டு வந்துள்ளார்.

இதுகுறித்து எக்கெர்மான் கூறியது:

‘எல்.இ.டி., ஸ்டம்ப்ஸ்’ தொட்டவுடன் ஒளிரும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இது, விக்கெட் கீப்பர் ‘கிளவ்ஸ்’ லேசாக பட்டால் போதும், சிவப்பு நிறத்தில் மின்னும். 

அம்பயர்கள் முடிவு எடுக்கவும் பெரும் உதவியாக உள்ளது. இதை அமைக்க செலவு அதிகம்.ஒரு போட்டிக்கு ரூ. 24 லட்சம் வரை தேவைப்படும். ‘பெயில்சின்’ விலையில் ஒரு ‘ஐ–போன்’ வாங்கிவிடலாம்.

இதனால், போட்டி முடிந்ததும் வீரர்கள் ‘ஸ்டம்ப்சை’ எடுத்து கொண்டாட்டத்தில் ஈடுபட இம்முறை அனுமதி இல்லை. இந்திய அணி கேப்டன் தோனியை பொறுத்தவரையில், வெற்றி பெற்றவுடன் ‘ஸ்டம்ப்சை’ எடுத்து வைத்துக் கொள்வதில் ஆர்வம் உள்ளவர். 

இத்தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றால், தோனிக்காக சில ‘ஸ்பெஷல்’ ஏற்பாடுகளை செய்து, ‘ஸ்டம்ப்சை’ பரிசாக தர திட்டமிட்டுள்ளேன். 

இவ்வாறு எக்கெர்மான் கூறினார்.

0 comments:

Post a Comment