
சர்வதேச ‘டுவென்டி–20’ போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறார் சங்ககரா. இலங்கை அணியின் ‘சீனியர்’ வீரர் சங்ககரா, 36.
கடந்த 2000ல் சர்வதேச கிரிக்கெட்டில் காலடி வைத்த இவர், இதுவரை 122 டெஸ்ட் (11,151 ரன்கள்), 369 ஒருநாள் (12,500), 50 சர்வதேச ‘டுவென்டி–20’ (1311) போட்டிகளில் விளையாடி உள்ளார்.
இவர், சர்வதேச ‘டுவென்டி–20’ போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
இதுகுறித்து சங்ககரா கூறியது: வங்கதேசத்தில் நடக்கும் உலக கோப்பை (டுவென்டி–20) தொடருக்கு பின், சர்வதேச ‘டுவென்டி–20’ போட்டிகளில் இருந்து ஓய்வு பெற உள்ளேன்.
இது, என் கடைசி ‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடர். இம்முடிவு வருத்தமானது என்றாலும், உண்மையானது. இதன்மூலம் அணியில் இடம் பெற காத்திருக்கும் திறமையான இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். உள்ளூர் ‘டுவென்டி–20’ போட்டிகளில் விளையாடுவேன்.
ஒருநாள் போட்டிகளிலும் தொடர்ந்து பங்கேற்பேன். ‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடருக்கு பின், அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் நடக்கவுள்ள உலக கோப்பை (50 ஓவர்) தொடர் மீது கவனம் செலுத்த உள்ளேன். எனது எதிர்காலம் குறித்து, அணித் தேர்வாளர்களிடம் பேச உள்ளேன்.
இரண்டு முறை இலங்கை அணிக்கு ‘டுவென்டி–20’ உலக கோப்பை வெல்லும் வாய்ப்பு கிடைத்தது.
ஆனால், பைனலில் சொதப்பியதால், கோப்பை வெல்ல முடியாமல் போனது. இம்முறை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, அணிக்கு கோப்பை வென்று தர முயற்சிப்பேன்.
இவ்வாறு சங்ககரா கூறினார்.
0 comments:
Post a Comment