நம்பிக்கை வைப்பாரா தோனி?

அஷ்வின், ஜடேஜாவை விட சிறப்பாக செயல்பட்ட போதும், தோனியின் ‘கடைக்கண்’ பார்வை கிடைக்காததால், அணியில் இடம் பெறமுடியாமல் தவிக்கிறார் அமித் மிஸ்ரா. 
           
இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா, 31. இதுவரை 13 டெஸ்ட் (43 விக்.,), 23 ஒருநாள் (40 விக்.,) போட்டிகளில் பங்கேற்றுள்ளார். அணியில் இடம் பெற்ற போதும், பெரும்பாலான நேரங்களில் பார்வையாளராகவே சென்று திரும்புகிறார். 
            
கடந்த ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 18 விக்கெட் கைப்பற்றினார். அதேநேரம், ‘ரெகுலர்’ கேப்டன் தோனி, அஷ்வின் மற்றும் ஜடேஜா மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளதால், விளையாடும் 11 பேர் கொண்ட அணியில் அமித் மிஸ்ரா இடம் பெற முடியாமல் போகிறது. 
            
சமீபத்திய ஆசிய கோப்பை போட்டியில், கோஹ்லி வாய்ப்பு தர பாகிஸ்தானுக்கு எதிராக 2 விக்கெட் சாய்த்து அசத்தினார். தவிர, இந்தியாவில் நடக்கும் பிரிமியர் போட்டி வரலாற்றில், அதிக விக்கெட் வீழ்த்திய வீரர்கள்வரிசையில் இரண்டாவது இடம் (76 போட்டி, 95 விக்.,) அமித் மிஸ்ராவுக்குத் தான். முதலிடத்தில் மலிங்கா (103 விக்.,) உள்ளார். 
           
இதனால் தான், ‘லெக் ஸ்பின்னர்’ அமித் மிஸ்ராவை ‘ஜோக்கர் கார்டு’ முறையில் ரூ. 4.75 கோடிக்கு, ஐதராபாத் அணி மீண்டும் தக்கவைத்தது. 
     
அதேநேரம், பிரிமியர் தொடரில் பங்கேற்ற 67 போட்டிகளில் 64 விக்கெட்டுகள் தான் கைப்பற்றியுள்ளார் அஷ்வின். ஜடேஜாவின் நிலை இன்னும் மோசம். இவரது 78 போட்டிகளில் 39 விக்கெட்டுகள் தான் கிடைத்தன.  
     
நரேந்திர ஹிர்வானி கூறுகையில்,‘‘ அமித் மிஸ்ராவை தோனி நம்ப வேண்டும். மற்ற பவுலர்கள் மீது வைக்கும் நம்பிக்கையை, இவர் மீதும் காட்ட வேண்டும். அணியில் பல ஆண்டுகள் விளையாடும் தகுதி இவருக்கு உள்ளது,’’ என்றார்.

0 comments:

Post a Comment