ராஜஸ்தான் அணியின் அடுத்த கேப்டன் யார்?

ராஜஸ்தான் அணியின் புதிய கேப்டனாக ஷேன் வாட்சனை நியமிக்கலாம்,'' என அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் அப்டன் தெரிவித்துள்ளார். 
இந்தியாவில் நடந்த ஐந்தாவது சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20' தொடரின் பைனலில் மும்பை அணி, ராஜஸ்தான் அணியை வீழ்த்தி, சாம்பியன் பட்டம் வென்றது. இப்போட்டியுடன் மும்பை அணியின் சச்சின், ராஜஸ்தான் அணி கேப்டன் டிராவிட் விடைபெற்றனர். 

இதையடுத்து ராஜஸ்தான் அணியின் புதிய கேப்டனாக ஆஸ்திரேலிய "ஆல்- ரவுண்டர்' ஷேன் வாட்சன் நியமிக்கப்படலாம் எனத் தெரிகிறது.

இதுகுறித்து பயிற்சியாளர் அப்டன் கூறியது: 

ராஜஸ்தான் அணியை டிராவிட் சிறப்பாக வழிநடத்தினார். மும்பைக்கு எதிரான பைனலில் "மிடில்-ஆர்டர்' பேட்ஸ்மேன்கள் ஏமாற்றியதால், தோல்வியடைய நேரிட்டது. 

டிராவிட் ஓய்வு பெற்றதை தொடர்ந்து, புதிய கேப்டனை தேர்வு செய்ய வேண்டும். துவக்கம் முதல் அணியில் இருக்கும் வாட்சன் தான் முதன்மையான தேர்வாக இருப்பார் என நினைக்கிறேன். 

இவர், அணியின் நலனுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வீரர். இளம் வீரர்களுடனும் சகஜமாக பழகுவார். 

இவ்வாறு அப்டன் கூறினார். 

0 comments:

Post a Comment