தெண்டுல்கருடன் யாரையும் ஒப்பிட இயலாது

தெண்டுல்கருடன் யாரையும் ஒப்பிட இயலாது என்று பாகிஸ்தான் ஆல்ரவுண்டர் அப்ரிடி கூறியள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:–
தெண்டுல்கர் எப்போதுமே தனது விருப்பப்படியே விளையாடுவார். அவருடன் யாரையும் ஒப்பிட இயலாது. அவருடன் நான் அதிகமான போட்டியில் விளையாடி இருக்கிறேன். 

இந்த பூமியில் பிறந்த அற்புதமான வீரர். பழகுவதற்கு எளிமையானவர். உண்மையிலேயே தெண்டுல்கர் தான் தொழில் ரீதியான கிரிக்கெட் வீரர் ஆவார். 

ரசிகர்களை மிகப்பெரிய அளவில் கவர்ந்து இழுக்கக்கூடிய ஆற்றல் அவரிடம் இன்னும் இருக்கிறது. அவரது கிரிக்கெட் அர்ப்பணிப்பு பற்றி பல ஆண்டு காலம் பேசலாம். அவரது சாதனைகளை முறியடிக்க இயலாது. நீண்டகாலம் ஆகலாம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதேபோல முன்னாள் கேப்டன் ரஷித் லத்தீப் முன்னாள் பயிற்சியாளர் மோசின்கான் ஆகியோரும் தெண்டுல்கரை வெகுவாக பாராட்டி உள்ளனர்.

0 comments:

Post a Comment