50000 ரன்களை எட்டுவாரா சச்சின்?

சாம்பியன்ஸ் லீக் தொடரில் மும்பை அணி, பெர்த் அணியை எதிர்கொள்கிறது. இதில் சச்சின், 26 ரன்கள் எடுக்கும் பட்சத்தில், சர்வதேச போட்டிகளில் 50,000 ரன்களை எடுத்த முதல் வீரர் என்ற பெருமை பெறலாம்.
ஐந்தாவது சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடக்கிறது. 10 அணிகள், இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, லீக் முறையில் போட்டிகள் நடக்கின்றன. "ஏ' பிரிவில் 12 புள்ளிகள் பெற்ற ராஜஸ்தான் அணி, அரையிறுதிக்கு முன்னேறியது. 

மும்பை அணியை பொறுத்தவரையில் முதல் போட்டியில் ராஜஸ்தானிடம் தோற்றது. அடுத்து ஒடாகோவுக்கு எதிரான போட்டி, மழையால் பாதிக்கப்பட்டது. பின் லயன்ஸ் அணியை வீழ்த்தியது. 

இதனிடையே, இப்பிரிவில் இன்று நடக்கும் கடைசி மோதலில் மும்பை அணி, ஆஸ்திரேலியாவின் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணியை சந்திக்கிறது. இதில் வெற்றிக்கு முயற்சிக்கும் எனத் தெரிகிறது.


சச்சின் நம்பிக்கை:

மும்பை அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின், கடந்த 2 போட்டியில் 20 ரன்கள் மட்டுமே எடுத்து சொதப்புகிறார். இன்று 26 ரன்கள் எடுக்கும் பட்சத்தில், சர்வதேச போட்டிகளில் 50,000 ரன்கள் எடுத்த வீரர் என்ற பெருமை பெறலாம்.

மற்றபடி, துவக்க வீரர் ஸ்மித், கேப்டன் ரோகித் சர்மா, போலார்டு மட்டும் பேட்டிங்கில் ஆறுதல் தருகின்றனர். தினேஷ் கார்த்திக், அம்பதி ராயுடு ஏமாற்றம் தொடர்கிறது. 

பவுலிங்கில் "யார்க்கர்' மலிங்கா இல்லாதது பலவீனம் தான். வேகப்பந்து வீச்சாளர்கள் மிட்சல் ஜான்சன், கூல்டர் நைல் இதுவரை தலா ஒரு விக்கெட் தான் வீழ்த்தியுள்ளனர். "சீனியர்' ஹர்பஜனும் மோசம் தான். பிரக்யான் ஓஜா நம்பிக்கை தொடரும் என நம்பலாம்.


முதல் வெற்றி:

இத்தொடரில் பங்கேற்ற அணிகளில் பலவீனமாது பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் தான். பங்கேற்ற 3 போட்டிகளில் 2ல் தோற்றது. ஒரு போட்டி மழையால் ரத்தாக, அரையிறுதி வாய்ப்பு கலைந்தது. 

இதனால், இன்று இந்த அணி ஆறுதல் வெற்றிக்கு முயற்சிக்கலாம். இதற்கு கார்ட்ரைட், வோஜஸ் உதவலாம். கேப்டன் காடிச், இளம் வீரர் ஏகார் ஏமாற்றுகின்றனர். பவுலிங்கில் பாரிஸ், பெக்ரன்டர்ப் ஆறுதல் தருகின்றனர். 
இன்னும் 26 ரன்கள்

இந்திய "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின், கிரிக்கெட் அரங்கில் 50 ஆயிரம் ரன்கள் என்ற புதிய மைல்கல்லை எட்ட, இன்னும் 26 ரன்கள் தேவைப்படுகிறது. டில்லியில் இன்று இச்சாதனை படைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

0 comments:

Post a Comment