ஷேவாக், காம்பீர் எதிர்காலம் கேள்விகுறி

2011–ம் ஆண்டு உலக கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம் பெற்று இருந்த சீனியர் வீரர்கள் ஷேவாக், காம்பீர், யுவராஜ்சிங், ஹர்பஜன்சிங், ஜாகீர்கான் ஆகியோர் மோசமான ஆட்டம் மற்றும் உடல் தகுதி காரணமாக அணியில் இருந்து தொடர்ந்து நீக்கப்பட்டனர்.

இதில் யுவராஜ்சிங் மட்டும் தற்போது ஆஸ்திரேலியவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இடம் பெற்றுள்ளார். மற்ற வீரர்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டனர்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இடம் கிடைக்கும் என்று ஷேவாக், காம்பீர் எதிர்பார்த்து இருந்தனர். இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி சிறப்பாக ஆடி வருவதால் தேர்வு குழு தொடர்ந்து அவர்களை கண்டுகொள்ளவில்லை.

இதன் காரணமாக ஒருநாள் போட்டியில் ஷேவாக், காம்பீரின் எதிர்காலம் கேள்விகுறி நிலையில் உள்ளது. அவர்கள் மீண்டும் ஒருநாள் போட்டியில் இடம் பெறுவதற்கான வாய்ப்பு மிகமிக குறைவாகவே இருக்கிறது.

ஷேவாக் கடைசியாக கடந்த ஜனவரி மாதம் பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ஆடினார். அதன்பிறகு நடந்த இங்கிலாந்து தொடர், சாம்பியன்ஸ் டிராபி, வெஸ்ட்இண்டீசில் நடந்த 3 நாடுகள் போட்டி, ஜிம்பாப்வே தொடர், தற்போது ஆஸ்திரேலியா தொடர் (முதல் 3 போட்டி) ஆகியவற்றில் தொடர்ந்து புறக்கணிக்கப்பட் டார்.

ஷேவாக் 251 ஒருநாள் போட்டியில் விளையாடி 8273 ரன் எடுத்துள்ளார். அதிகபட்ச ரன் 219 ஆகும். இதுதான் உலக சாதனையாக இருக்கிறது. 15 சதம், 38 அரை சதம் அடித்துள்ளார். 96 விக்கெட் கைப்பற்றி உள்ளார்.

காம்பீர் இங்கிலாந்து தொடருக்கு நீக்கப்பட்டார். அதன்பிறகு அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுக்கவில்லை. அவர் 147 ஒருநாள் போட்டியில் விளையாடி 5238 ரன் எடுத்துள்ளார். அதிகபட்ச ரன் 150 ஆகும். 11 சதமும், 34 அரைசதமும் எடுத்துள்ளார்.

ஜாகீர்கான், ஹர்பஜன் சிங்கும் இதே நிலையில்தான் உள்ளனர். ஜாகீர்கான் 282 விக்கெட்டும் (200 போட்டி), ஹர்பஜன்சிங் 259 விக்கெட்டும்(229 ஆட்டம்) கைப்பற்றி உள்ளனர். ஆனால் டெஸ்ட் போட்டியை பொறுத்தவரை அவர்கள் மீண்டும் இடம் பெற முடியாது என்று கூறிவிட இயலாது

0 comments:

Post a Comment