இந்திய அணியின் நம்பர்-1 இடத்துக்கு ஆபத்து வருமா?

கடந்த இரு போட்டிகள் மழையால் ரத்தானதால், இந்திய அணியின் "நம்பர்-1' இடத்துக்கு இருந்த ஆபத்து நீங்கியது.
சர்வதேச ஒருநாள் தரவரிசையில், கடந்த 2012, ஜூலை முதல் இந்திய அணி முதலிடத்தில் (122) உள்ளது. தற்போதைய ஆஸ்திரேலிய தொடரை, 1-6 என்ற கணக்கில் இழக்கும் பட்சத்தில் "நம்பர்-1' இடம் பறிபோகும் அபாயம் இருந்தது.

இதற்கேற்ப, முதல் 3 போட்டிகள் முடிவில், இந்திய அணி 1-2 என, பின் தங்கி இருந்தது. அடுத்த இரு போட்டிகள் மழையால் ரத்தானது. 

இதனால், மீதமுள்ள போட்டிகளில் தோற்று தொடரை 1-4 என, இழந்தாலும் இந்திய அணி 120 புள்ளியுடன் முதலிடத்தில் நீடிக்கும். ஆஸ்திரேலியா 119 புள்ளி பெறும். 

ஒருவேளை இந்திய அணி அடுத்த இரு போட்டிகளில் வெல்லும் பட்சத்தில், 123 புள்ளி கிடைக்கும். 2வது இடத்தில் ஆஸ்திரேலியா (114) நீடிக்கும். அடுத்த இரு இடத்தில் 3 புள்ளிகள் குறைவாக (111) உள்ள இங்கிலாந்து, இலங்கை உள்ளன. 


பாக்., வாய்ப்பு: 

4, 5 வது இடத்தில் தென் ஆப்ரிக்கா (105), பாகிஸ்தான் (102) உள்ளன. நாளை துவங்கும் இரு அணிகள் மோதும் ஒருநாள் தொடரை, பாகிஸ்தான் 3-2 என வென்றால், 5வது இடத்துக்கு (103) முன்னேறும். தென் ஆப்ரிக்கா (102) ஆறாவது இடத்துக்கு தள்ளப்படும்.

மாறாக, தென் ஆப்ரிக்கா 4-1 என கைப்பற்றினால், 107 புள்ளி கிடைக்கும். 5-0 என்று வென்றாலும், ஐந்தாவது இடத்தில் (110) மாற்றம் இருக்காது.

0 comments:

Post a Comment