20 ஓவர் உலகக்கோப்பை - முதல் போட்டியில் இந்தியா- பாகிஸ்தான்

20 ஒவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த வருடம் வங்காளதேசத்தில் நடைபெறும் என ஏற்கனவே ஐ.சி.சி. அறிவித்தது. 
இந்நிலையில் இன்று அதிகாரப்பூர்வமான போட்டி அட்டவணையை அறிவித்துள்ளது. 

அதன்படி மார்ச் 16-ந்தேதி போட்டி தொடங்கி ஏப்ரல் 6-ந்தேதி வரை நடக்கிறது. மார்ச் 16-ந்தேதி தகுதிச் சுற்று போட்டி நடக்கிறது. 

மார்ச் 21-ந்தேதி லீக் சுற்று ஆரம்பிக்கிறது. ஏப்ரல் 3-ந்தேதி மற்றும் 4-ந்தேதி அரை இறுதிப்போட்டியும் , ஏப்.6-ந்தேதி இறுதிப்போட்டியும் நடக்கிறது.

போட்டியில் பங்குபெறும் அணிகள் குரூப்-1, குரூப்-2 என பிரிக்கப்படுகிறது. குரூப்-1ல் உள்ள அணிகள் மற்ற அணிகளுடன் ஒருமுறை மோதவேண்டும். 

புள்ளிகள் அடிப்படையில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணி அரை இறுதிக்கு முன்னேறும். அரை இறுதியில் குரூப்-1-ல் முதல் இடம் பெற்ற அணி, குரூப்-2ல் இரண்டாவது இடம் பெற்ற அணியுடனும், குரூப்-2-ல் இரண்டாம் இடம் பெற்ற அணி, குரூப்-2ல் முதல் இடம் பெற்ற அணியுடனும் மோதும். இதில் வெற்றி பெற்ற அணிகள் இறுதிப்போட்டியில் மோதும்.

குரூப்-2ல் இந்திய அணி இடம்பெற்றுள்ளது. அதே பிரிவில் பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, வெஸ்ட்இண்டீஸ், தகுதிச்சுற்றில் ஏ பிரிவில் முதல் இடம் பெறும் அணியும் இடம்பெற்றுள்ளது.

மார்ச் 21-ந்தேதி இந்தியா தனது முதல் போட்டியில் பரம எதிரியான பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. மார்ச் 23-ந்தேதி வெஸ்ட் இண்டீசுடனும், 28-ந்தேதி தகுதிச்சுற்றில் ஏ பிரிவில் முதல் இடம் பெறும் அணியுடனும், 30-ந்தேதி ஆஸ்திரேலியாவுடனும் மோதுகிறது.

0 comments:

Post a Comment