அகார்கர் ஓய்வுக்கு காரணம் என்ன?

இந்திய அணிக்காக விளையாட மீண்டும் வாய்ப்பு கிடைக்காது என, தெரிந்ததால் தான் ஓய்வு பெற்றேன்,'' என, இந்திய வீரர் அகார்கர் தெரிவித்தார்.
இந்திய அணியின் "ஆல்-ரவுண்டர்' அகார்கர், கிரிக்கெட் அரங்கிலிருந்து நேற்று முன்தினம் விடை பெற்றார். கடைசியாக 2007ல் இங்கிலாந்துக்கு எதிரான ஓவல் ஒரு நாள் போட்டியில் பங்கேற்றார். 

இதன் பின் இந்திய அணியில் இடம் கிடைக்காததால், ரஞ்சி தொடரில் மும்பை அணி கேப்டனாக விளையாடினார். ஓய்வு பெற்றது குறித்து அகார்கர் கூறியது: 

கடந்த 17 ஆண்டுகளாக கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று விட்டேன். இந்நிலையில், என்றாவது ஒருநாள் ஓய்வு பெற்றுத்தான் ஆகவேண்டும். 

இந்திய அணிக்காக விளையாட மீண்டும் வாய்ப்பு கிடைத்திருந்தால், ஆட்டத்தை தொடர்ந்திருப்பேன். இது நடக்காது என தெரிந்தவுடன், ஓய்வை அறிவித்துவிட்டேன். 

இது என்ற முடிவு உடனடியாக எடுக்கப்பட்டது அல்ல. தவிர, இந்த ஆண்டு உடற்தகுதியிலும் சிறப்பாக இருக்க முடியவில்லை. 

வேகப்பந்துவீச்சிலும் திறமை வெளிப்படுத்த முடியவில்லை. இது தான், கிரிக்கெட் விளையாடியது போதும் என்ற மனநிலைக்கு வர காரணமாக அமைந்தது. 

இவ்வாறு அகார்கர் கூறினார்

0 comments:

Post a Comment