இன்று (IPL) ஐ.பி.எல்., ஏலம்

ஐந்தாவது ஐ.பி.எல்., தொடருக்கான வீரர்கள் ஏலம் இன்று பெங்களூருவில் நடக்கிறது. இந்தியாவின் ரவிந்திர ஜடேஜா, நியூசிலாந்தின் பிரண்டன் மெக்கலம் ஆகியோர் அதிக தொகைக்கு ஏலம் போவார்கள் என்று தெரிகிறது.

ஐந்தாவது ஐ.பி.எல்., "டுவென்டி-20' தொடர் வரும் ஏப்., 4 முதல் மே 27 வரை நடக்கிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், கோல்கட்டா நைட்ரைடர்ஸ், பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் உட்பட 9 அணிகள் இம்முறை பங்கேற்கின்றன.

இதற்கான வீரர்கள் ஏலம் வரும் இன்று பெங்களூருவில் நடக்கிறது. இதில் 8 இந்திய வீரர்கள் உட்பட, உலகின் 11 அணிகளை சேர்ந்த 144 பேர் இடம் பெற்றுள்ளனர்.

ரத்து செய்யப்பட்ட கொச்சி அணி வீரர்களும் இந்த பட்டியலில் உள்ளனர். ஒவ்வொரு அணியும் தங்களது வீரர்கள் எண்ணிக்கையை 30ல் இருந்து 33 ஆக உயர்த்துகிறது.

இந்தியாவின் ரவிந்திர ஜடேஜா, வினய் குமார், பார்த்திவ் படேல், மெக்கலம், ஜெயவர்தனா (இலங்கை) ஆகியோருக்கு, இந்த ஏலத்தில் அதிக தொகை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் "மேட்ச் வின்னராக' உள்ள "ஆல் ரவுண்டர்' ஜடேஜாவை மும்பை அணி தட்டிச் செல்லும் எனத் தெரிகிறது.

இதுகுறித்து ஒரு அணி உரிமையாளர் கூறுகையில்,"" பேட்டிங், பவுலிங் மற்றும் பீல்டிங்கில் சம அளவில் திறமை வெளிப்படுத்துபவர் ஜடேஜா. இவர் இன்றைய ஏலத்தில் ரூ. 7 கோடி வரைக்கும் போனால் கூட ஆச்சரியமில்லை,'' என்றார்.

வினய் குமாரை எடுக்க பெங்களூரு, புனே அணியிடையே போட்டி இருக்கும் என்று நம்பப்படுகிறது.

முதல் ஐ.பி.எல்., தொடரின் முதல் போட்டிக்குப் பின் பெரிய அளவில் சோபிக்காத நியூசிலாந்தின் பிரண்டன் மெக்கலத்தை, ராஜஸ்தான் அல்லது மீண்டும் கோல்கட்டா அணி வாங்கலாம்.

0 comments:

Post a Comment