7வது ஒருநாள் போட்டியில் சேவாக்குக்கு மீண்டும் ஓய்வு

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 3 நாடுகள் கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் சுழற்சி முறை பின்பற்றப்பட்டு வருகிறது.

தொடக்க வீரர்களான தெண்டுல்கர், சேவாக், காம்பீர் ஆகியோர் சுழற்சி முறையில் அணியில் ஆடிவருகிறார்கள்.

முதல் ஆட்டத்தில் சேவாக்கும், 2-வது ஆட்டத்தில் காம்பீருக்கும், 3-வது ஆட்டத்தில் தெண்டுல்கருக்கும், 4-வது போட்டியில் மீண்டும் சேவாக்குக்கு ஒய்வு வழங்கப்பட்டது.

இந்திய அணி 5-வது 'லீக்' ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை நாளை (ஞாயிற்றுக்கிழமை) பிரிஸ்பேனில் சந்திக்கிறது. சுழற்சி முறைப்படி இந்த ஆட்டத்தில் காம்பீருக்கு ஒய்வு கொடுக்கப்படும்.

ஆனால் காம்பீர் பேட்டிங்கில் நல்ல நிலையில் இருப்பதால் அவருக்கு ஒய்வு கொடுக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அவர் இலங்கைக்கு எதிரான கடைசி ஆட்டத்தில் 91 ரன்கள் எடுத்தது குறிப்பிடத்தக்கது.

ஆனால் கேப்டன் தோனி தொடக்க வீரர்களின் சுழற்சி முறையை தொடர்ந்து பின்பற்றுவதில் உறுதியாக இருப்பதாக கூறினார்.

இந்நிலையில், நாளைய போட்டியில் காம்பீருக்கு ஓய்வு கொடுக்கப்படவில்லை. இம்முறை மீண்டும் சேவாக்குக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.

துவக்க ஆட்டக்காரர்களாக கௌதம் கம்பீரும், சச்சினும் களமிறக்கப்பட உள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 comments:

Post a Comment