ஐ.பி.எல்., கிரிக்கெட் ஏலம் : இந்திய ‌வீரர் ஜடேஜாவுக்கு 9. 72 கோடி

வரும் ஏப்., மாதம் 4ம் தேதி முதல் நடக்கவிருக்கும் ஐ.பி.எல். போட்டியில் ஆடும் வீரர்களை ஏலம் எடுக்கும் பணி இன்று நடந்தது. இதில் இந்திய வீரர் ஜடேஜா அதிப்பட்சமாக ஒன்பதே முக்கால் கோடிக்கு விலைபோனார். லட்சுமணை யாரும் ஏலத்தில் கேட்கவில்லை.


இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜாவை, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ரூ. 9.72 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது. கடந்த தொடரில், இவர் கொச்சி டஸ்கர்ஸ் அணியில் விளையாடினார்.


நியூசிலாந்து வீர் பிராண்டன் மெக்கலமை ( 4 .4 ‌கோடிக்கு ) கோல்கட்டா நைட்ரைடர்ஸ் அணியும், இலங்கை சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனை ( 1. 06 கோடிக்கு ) , பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், ஜெயவர்த்னேவை ( 6. 8 கோடிக்கு) டில்லி டேர்டெவில்ஸ் அணியும், பர்த்தீவ் பட்‌டேலை டெக்கார் சார்ஜர் அணியும், ஏலம் எடுத்துள்ளன.



சகாரா இந்தியா ஏலத்தில் இருந்து விலகல் :


இந்திய கிரிக்கெட் அணியின் ஸ்பான்சர்ஷிப்பை விலக்கிக்கொள்வதோடு மட்டுமல்லாமல், ஐ.பி.எல், அணியான புனே வாரியர்ஸ் அணியின் உரிமையாளர் பதவியிலிருந்தும் விலகுவதாக சகாரா இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.


இதன்மூலம், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் கீழ் செயல்படும் அனைத்து கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் தங்களது ஸ்பான்சர்ஷிப்பை விலக்கிக் கொள்கிறோம் என்றும் கூறியுள்ளது.

0 comments:

Post a Comment