தோனிக்கு தடை - சச்சின் ஏமாற்றம் - இந்தியா படுதோல்வி

பிரிஸ்பேனில் நடந்த முத்தரப்பு ஒரு நாள் போட்டியில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவிடம் 110 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.

இப்போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 288 ரன்கள் எடுத்தது. பாரஸ்ட்(52), மைக்கேல் ஹசி(59) அசத்தினர்.

அடுத்து களமிறங்கிய இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் சொதப்பினர். சச்சின்(3), காம்பிர்(5), கோஹ்லி(12), ரோகித்(0), ரெய்னா(28), ரவிந்திர ஜடேஜா(18) விரைவில் வெளியேறினர்.

தோனி 56 ரன்கள் எடுத்து ஆறுதல் தந்தார். இந்திய அணி 43.3 ஓவரில் 178 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி, தோல்வி அடைந்தது.

ஆஸ்திரேலியா சார்பில் ஹில்பெனாஸ் 5, பிரட் லீ 3 விக்கெட் வீழ்த்தினர்.

இப்போட்டியில் இந்திய அணி தாமதமாக பந்துவீசியதால், கேப்டன் தோனிக்கு ஒரு போட்டியில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது.

இவர், இலங்கைக்கு எதிரான அடுத்த போட்டியில் பங்கேற்க முடியாது.

0 comments:

Post a Comment