இந்தியா பைனலுக்கு செல்ல முடியுமா?

ஆஸ்திரேலியாவில் நடக்கும் முத்தரப்பு ஒருநாள் தொடரில், பைனலுக்கு செல்வதில் மூன்று அணிகளுக்குள் கடும் போட்டி நிலவுகிறது.

தற்போது இந்திய அணி கடைசி இடத்தில் (10 புள்ளி) உள்ளது. அணியின் ரன்ரேட்டும் (-0.733) மோசமாக இருக்கிறது. முதல் இரு இடத்தில் ஆஸ்திரேலியா (14, +0.433), இலங்கை (11, +0.481) அணிகள் உள்ளன.

இப்போதுள்ள நிலையில் இந்திய அணி அடுத்து வரும் இரு போட்டிகளில் (பிப்., 26, 28) வென்று விட்டால், 18 புள்ளியுடன் பைனலுக்கு சென்று விடலாம். ஏனெனில் மற்ற இரு அணிகளில் ஒரு அணியால் மட்டுமே, இத்தனை புள்ளிகளை பெறக்கூடிய நிலை உள்ளது.

மாறாக இந்திய அணி ஏதாவது ஒரு போட்டியில் தோற்றால், பைனல் வாய்ப்பு எப்படி உள்ளது என்பது குறித்து ஒரு ஆய்வு:


வாய்ப்பு 1:

இன்று ஆஸ்திரேலியா வென்றால் 18 புள்ளி, இலங்கை 11
பிப்., 26ல் ஆஸ்திரேலியா வென்றால் 22 புள்ளி, இந்தியா 10
பிப்., 28ல் இந்தியா வென்றால் 14 புள்ளி, இலங்கை 11

இதன்படி, ஆஸ்திரேலியா பைனல் வாய்ப்பு உறுதி. அதேநேரம், மார்ச் 2ல் நடக்கவுள்ள ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில், இலங்கை தோற்றால் (11) இந்தியா பைனல் செல்லலாம் (14). மாறாக, இலங்கை வென்றால் (15), இந்தியா வெளியேறும்.


வாய்ப்பு 2:

இன்று ஆஸ்திரேலியா வென்றால் 18 புள்ளி, இலங்கை 11
பிப்., 26ல் இந்தியா வென்றால் 14 புள்ளி, ஆஸ்திரேலியா 18
பிப்., 28ல் இந்தியா தோற்றால் 14 புள்ளி, இலங்கை 15


வாய்ப்பு 3:

இன்று இலங்கை வென்றால் 15 புள்ளி, ஆஸ்திரேலியா 14
பிப்., 26ல் ஆஸ்திரேலியா வென்றால் 18 புள்ளி, இந்தியா 10
பிப்., 28ல் இந்தியா வென்றால் 14 புள்ளி, இலங்கை 15

வாய்ப்பு 2, 3ன் படி, மார்ச் 2ல் நடக்கும் ஆஸ்திரேலியா, இலங்கை அணிகள் மோதும் கடைசி லீக் போட்டியின் முடிவு எப்படி இருப்பினும், இந்த இரு அணிகளும் பைனலுக்கு சென்று விடும். இந்தியா "அவுட்'


வாய்ப்பு 4:

இன்று இலங்கை வென்றால் 15 புள்ளி, ஆஸ்திரேலியா 14
பிப்., 26ல் இந்தியா வென்றால் 14 புள்ளி, ஆஸ்திரேலியா 14
பிப்., 28ல் இலங்கை வென்றால் 18 புள்ளி, இந்தியா 14

இதன்படி இலங்கை பைனலுக்கு செல்லும். மார்ச் 2ல் நடக்கும் இலங்கைக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியா வென்றால் (18) இரண்டாவது அணியாக பைனலுக்கு செல்லலாம். இதில் தோற்றால் "ரன்ரேட்' அடிப்படையில் (இந்தியா, ஆஸ்திரேலியா) ஒரு அணி முடிவாகும்.

0 comments:

Post a Comment