விரைவில் மீண்டு வருவேன் - யுவராஜ்

நான் விரைவில் குணமடைய வேண்டுமென நாடு முழுவதும் உள்ள ரசிகர்கள் பிரார்த்திக்கின்றனர். கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. ஆயிரக்கணக்கில் வாழ்த்துக்கள் அனுப்புகின்றனர்.

இவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றி. கேன்சரில் இருந்து மீண்டு, இந்திய அணிக்காக விளையாட காத்திருக்கிறேன்,என, யுவராஜ் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரர் யுவராஜ். இவரது நுரையீரலுக்கு இடையில் "கோல்ப் பந்து அளவுக்கு சிறிய கேன்சர் கட்டி இருப்பது கண்டறியப்பட்டது. இதற்காக அமெரிக்காவில் உள்ள பாஸ்டன் கேன்சர் ஆய்வு மையத்தில் "கீமோதெரபி சிகிச்சை பெற்று வருகிறார்.

யுவராஜுக்கு சிகிச்சை அளிப்பதில் தாமதம் ஏற்பட்டதாக, அவரது தந்தை யோகராஜ் ஆதங்கம் தெரிவித்திருந்தார். இது குறித்து தனது "டுöவிட்டர் இணையதளத்தில் யுவராஜ் வெளியிட்ட செய்தி:
சிகிச்சை தாமதமானதற்கு எனது குரு சந்த் அஜித் சிங் ஹன்சாலிவாலா, பி.சி.சி.ஐ., மீது சிலர் பழி சுமத்துகின்றனர்.

இது மிகவும் தவறு. பி.சி.சி.ஐ., தலைவர் சீனிவாசன், அதன் நிர்வாகிகள் எனக்கு மிகப் பெரும் ஆதரவு அளிக்கின்றனர். இவர்களால் தான் சிறந்த சிகிச்சை பெற்று வருகிறேன். சிகிச்சை தாமதமானதற்கு நான் தான் காரணம்.

எனது "பிசியோதெரபிஸ்ட்ஜதின் சவுத்ரி மீதும் சிலர் புகார் கூறுகின்றனர். இவர் மீது தவறு எதுவும் இல்லை. எனக்கு உதவி தான் செய்தார். நான் தான் மாற்று மருத்துவ முறையில் சில காலம் சிகிச்சை எடுத்தேன்.

தற்போது விரைவாக குணமடைந்து வருகிறேன். இந்த கடினமான காலக்கட்டத்தில் மிகவும் துணிச்சலாக போராடி, வலிமையான வீரராக மீண்டு வருவேன். நாடு முழுவதும் <உள்ள ரசிகர்கள் எனக்காக பிரார்த்திக்கின்றனர்.

கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. ஆயிரக்கணக்கில் வாழ்த்துக்கள் அனுப்புகின்றனர். இவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றி.

கேன்சர் நோயில் இருந்து மீண்ட அமெரிக்க சைக்கிள் பந்தய வீரர் லான்ஸ் ஆம்ஸ்டிராங்கை விரைவில் சந்தித்து ஊக்கம் பெற உள்ளேன். மத்திய விளையாட்டு துறை அமைச்சர் அஜய் மேகன், காஷ்மீர் முதல்வர் ஓமர் அப்துல்லா, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, "மீடியாவுக்கும் எனது நன்றி.

விரைவில் இந்திய கிரிக்கெட் அணியின் உடை, தொப்பி அணிந்து நாட்டுக்காக மீண்டும் விளையாட காத்திருக்கிறேன். ஜெய்ஹிந்த்.

இவ்வாறு யுவராஜ் தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment