நம்புங்க இன்னும் இருக்கு பைனல் வாய்ப்பு

முத்தரப்பு தொடரில் அதிசயம் அரங்கேறியது.நேற்று நடந்த பரபரப்பான லீக் போட்டியில், விராத் கோஹ்லி சதம் விளாச, இந்திய அணி 321 ரன்களை 36.4 ஓவரில் எடுத்து "சூப்பர்' வெற்றி பெற்றது. இதன் மூலம் முக்கியமான போனஸ் புள்ளியை பெற்று, "பைனல்' வாய்ப்பை தக்க வைத்தது. இலங்கையின் தில்ஷன், சங்ககராவின் சதம் வீணானது. மார்ச் 2ல் நடக்கும் போட்டியில் ஆஸ்திரேலிய அணி, இலங்கையை வீழ்த்தினால், இந்தியா பைனலுக்கு செல்வது உறுதி. இந்தியா, ஆஸ்திரேலியா, இலங்கை அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு...

இந்தியா சாதனை வெற்றி - விராத் கோஹ்லி அசத்தல் சதம்

விராத் கோஹ்லியின் அசத்தல் சதம் கைகொடுக்க, இலங்கைக்கு எதிரான கடைசி லீக் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில், சாதனை வெற்றி பெற்றது. இந்தியா, இலங்கை அணிகள் இடையிலான முத்தரப்பு ஒருநாள் தொடரின், கடைசி லீக் போட்டியில் மோதுகின்றன. "டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன், பீல்டிங் தேர்வு செய்தார்.இலங்கை அணியின் ஜெயவர்தனா 22 ரன்கள் எடுத்தார். பின் இணைந்த தில்ஷன், சங்ககரா ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சங்ககரா (105), தில்ஷன் சதம் அடித்தனர். இலங்கை அணி 50...

சர்ச்சை கிளப்பிய சச்சின் ரன் அவுட்

சிட்னி ஒருநாள் போட்டியில் சச்சினுக்கு "ரன் அவுட்' கொடுக்கப்பட்டதும், டேவிட் ஹசிக்கு "அவுட்' மறுக்கப்பட்டதும் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இவ்விரு சம்பவத்திலும் இந்திய அணிக்கு தான் பாதிப்பு என்பதால், அம்பயர்கள் மீது தோனி குறை கூறினார். நேற்று இந்தியா "பேட்' செய்த போது 7வது ஓவரை பிரட் லீ வீசினார். காம்பிர் ஒரு ரன்னுக்காக அழைத்தார். மறுமுனையில் இருந்து சச்சின் ஓடி வரும் போது இடையில் புகுந்த பிரட் லீ தேவையில்லாமல் இடையூறு செய்தார். அதற்குள் வார்னர் பந்தை...

இந்திய அணி படுதோல்வி - சச்சின் ஏமாற்றம்

சிட்னியில் நடந்த முத்தரப்பு ஒருநாள் தொடரின், முக்கிய லீக் போட்டியில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவிடம் 87 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. ஆஸ்திரேலியா 19 புள்ளிகளுடன் பைனலுக்கு தகுதி பெற்றது. இப்போட்டியில் முதலில் "பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 252 ரன்கள் எடுத்தது. வார்னர்(68), டேவிட் ஹசி(54), வேட்(56) அரைசதம் கடந்து அசத்தினர். எட்டக் கூடிய இலக்கை துரத்திய இந்திய அணிக்கு சேவக்(5) சோபிக்கவில்லை. 100வது சதம் அடிப்பார் என...

காலை வாருது கிரிக்கெட் - மானம் காக்குது ஹாக்கி

இந்திய ஹாக்கிக்கு நேற்று பொன்னான நாள். லண்டன் ஒலிம்பிக் தகுதி ஹாக்கி தொடரின் பைனலுக்கு பெண்கள், ஆண்கள் அணிகள் முன்னேறின. பரபரப்பான கடைசி லீக் போட்டியில் பெண்கள் அணி, இத்தாலியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. ஆண்கள் அணி, போலந்தை 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.லண்டன் ஒலிம்பிக் போட்டிக்கு முன்னேற, தகுதி சுற்று ஹாக்கி போட்டி டில்லியில் நடக்கிறது. நேற்று பெண்கள் பிரிவில் நடந்த கடைசி லீக் போட்டியில் இந்தியா, இத்தாலி அணிகள் மோதின. இதில் வென்றால்...

இந்தியா பைனலுக்கு செல்ல முடியுமா?

ஆஸ்திரேலியாவில் நடக்கும் முத்தரப்பு ஒருநாள் தொடரில், பைனலுக்கு செல்வதில் மூன்று அணிகளுக்குள் கடும் போட்டி நிலவுகிறது. தற்போது இந்திய அணி கடைசி இடத்தில் (10 புள்ளி) உள்ளது. அணியின் ரன்ரேட்டும் (-0.733) மோசமாக இருக்கிறது. முதல் இரு இடத்தில் ஆஸ்திரேலியா (14, +0.433), இலங்கை (11, +0.481) அணிகள் உள்ளன. இப்போதுள்ள நிலையில் இந்திய அணி அடுத்து வரும் இரு போட்டிகளில் (பிப்., 26, 28) வென்று விட்டால், 18 புள்ளியுடன் பைனலுக்கு சென்று விடலாம். ஏனெனில் மற்ற இரு...

தோனி Vs சேவக் நிறுத்துவார்களா சண்டையை?

கேப்டன் தோனி, சேவக் இடையிலான மோதல் முற்றுகிறது. சுழற்சி முறை "பார்முலா' தொடர்பாக இருவரும் மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்து வருவதால், இந்திய அணியில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இப்பிரச்னையில் பி.சி.சி.ஐ., தலையிட்டு உடனடி தீர்வு காண வேண்டுமென கபில் தேவ் வலியுறுத்தியுள்ளார்.ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி, டெஸ்ட் தொடரை முழுமையாக இழந்தது. முத்தரப்பு ஒருநாள் தொடரிலும் சொதப்புகிறது. இந்தச் சூழலில், "டாப்-ஆர்டரில்' சச்சின், சேவக், காம்பிர் ஆகியோர் "பீல்டிங்கில்'...

பாண்டிங் வழியை பின்பற்றுவாரா சச்சின்?

சத சாதனையை இன்று நிகழ்த்துவார், அடுத்த போட்டியில் நிகழ்த்துவார் என்று ஒவ்வொரு போட்டியையும் எதிர்பார்த்து காத்திருக்கும் ரசிகர்களுக்கு தொடர்ந்து ஒரு வருட காலமாக ஏமாற்றம் அளித்து வரும் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர், ரிக்கி பாண்டிங் வழியை பின்பற்றி ஒருநாள் போட்டிகளிலிருந்து ஒய்வு பெற வேண்டும் என்ற முன்னணி வீரர்கள் மற்றும் கிரிக்கெட் விமர்சகர்களின் கருத்து, சச்சினின் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சி அளித்திருப்பதோடு மட்டுமல்லாது, கிரிக்கெட் உலகில்...

சண்டை...சர்ச்சை...பதவி ஆசை... இந்திய அணியில் உள்குத்து

தோனியின் சுழற்சி முறை "பார்முலாவால்' இந்திய அணியில் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது. இவர், தனக்கு பிடித்தமான ரோகித் சர்மா, ரெய்னாவை தக்க வைக்கவே "சீனியர்களை' பலிகடா ஆக்குவதாக குற்றம்சாட்டப்படுகிறது. தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வரும் இவரிடம் இருந்து, கேப்டன் பதவியை பறிப்பதற்கான வேலைகளும் மும்முரமாக நடக்கின்றன. முத்தரப்பு ஒருநாள் தொடரில் சச்சின், சேவக், காம்பிர் ஆகிய "டாப்-ஆர்டர்' வீரர்களுக்கு சுழற்சி முறையில் வாய்ப்பு அளிக்கப்படும் என தோனி தெரிவித்தார்....

இந்திய அணியால் ஆஸி.,யை வீழ்த்த முடியல

இந்திய அணியால் ஆஸ்திரேலியாவை மீண்டும் ஒருமுறை வீழ்த்த முடியவில்லை. நேற்று நடந்த முத்தரப்பு ஒருநாள் போட்டியில் 110 ரன்கள் வித்தயாசத்தில் படுதோல்வி அடைந்தது. பவுலிங், பேட்டிங், பீல்டிங் என அனைத்திலும் இந்தியா சொதப்பியது. புயல்வேகத்தில் பந்துவீசிய ஹில்பெனாஸ், பிரட் லீ, ஆஸ்திரேலிய அணிக்கு கைகொடுத்தனர். ஆஸ்திரேலியாவில் முத்தரப்பு ஒருநாள் தொடர் நடக்கிறது. நேற்று நடந்த லீக் போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் மோதின. இந்திய அணியில் அஷ்வின் நீக்கப்பட்டு,...

தோனிக்கு தடை - சச்சின் ஏமாற்றம் - இந்தியா படுதோல்வி

பிரிஸ்பேனில் நடந்த முத்தரப்பு ஒரு நாள் போட்டியில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவிடம் 110 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.இப்போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 288 ரன்கள் எடுத்தது. பாரஸ்ட்(52), மைக்கேல் ஹசி(59) அசத்தினர்.அடுத்து களமிறங்கிய இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் சொதப்பினர். சச்சின்(3), காம்பிர்(5), கோஹ்லி(12), ரோகித்(0), ரெய்னா(28), ரவிந்திர ஜடேஜா(18) விரைவில் வெளியேறினர். தோனி 56 ரன்கள் எடுத்து ஆறுதல்...

7வது ஒருநாள் போட்டியில் சேவாக்குக்கு மீண்டும் ஓய்வு

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 3 நாடுகள் கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் சுழற்சி முறை பின்பற்றப்பட்டு வருகிறது. தொடக்க வீரர்களான தெண்டுல்கர், சேவாக், காம்பீர் ஆகியோர் சுழற்சி முறையில் அணியில் ஆடிவருகிறார்கள். முதல் ஆட்டத்தில் சேவாக்கும், 2-வது ஆட்டத்தில் காம்பீருக்கும், 3-வது ஆட்டத்தில் தெண்டுல்கருக்கும், 4-வது போட்டியில் மீண்டும் சேவாக்குக்கு ஒய்வு வழங்கப்பட்டது. இந்திய அணி 5-வது 'லீக்' ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை நாளை (ஞாயிற்றுக்கிழமை) பிரிஸ்பேனில்...

யுவராஜ் சிங் விரைவாக குணமடைய வேண்டி பாடல்

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வரும் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் விரைவாக குணமடைய வேண்டி அவரது ரசிகர் ஒருவர் ’அலா’ என்னும் பாடல் ஒன்றை இசையமைத்துப் பாடியுள்ளார். ஹர்கோவிந்த் விஷ்வா என்னும் அந்த ரசிகர், ‘இது படை வீரர்களுக்காக பாடப்படும் பாடல் ரகம். இது யுவராஜுக்கு தைரியம் கொடுப்பதாக அமையும்.இந்தப் பாடலில் யுவராஜ் பற்றிய முக்கிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளன’ எனக் கூறியுள்ளா...

பயிற்சிக்கு இந்திய வீரர்கள் NO

இந்திய வீரர்கள் நேற்று பயிற்சியில் ஈடுபடாமல் தங்களது ஓட்டல் அறையில் "ரெஸ்ட்' எடுத்தனர். ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி நான்கு டெஸ்ட், 2 "டுவென்டி-20' போட்டிகளில் பங்கேற்றனர். இப்போது முத்தரப்பு ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடர் துவங்கி 64 நாட்கள் ஆனநிலையில், 22 நாட்கள் போட்டியில் பங்கேற்றனர். போக்குவரத்துக்கு 10, பயிற்சியில் 16 நாட்கள் செலவிட்டனர். 15 நாட்கள் ஓய்வில் இருந்தனர். நேற்று 16வது நாளாக முழு ஓய்வில் இருந்தனர். பெரும்பாலான வீரர்கள்...

வின்னர் தோனி - குவிகிறது பாராட்டு

ஒருநாள் போட்டிகளில் பின் வரிசையில் களமிறங்கி, போட்டியை வென்று தரும் "மேட்ச் வின்னராக' உள்ளார் இந்தியாவின் தோனி. இதை இலங்கை, ஆஸ்திரேலிய அணி கேப்டன்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். ஒருநாள் கிரிக்கெட்டில் வெற்றி நாயகனாக இருப்பது அவ்வளவு எளிதல்ல. "ரன்ரேட்' அதிகமாக தேவைப்படும். பின்வரிசையில் வரும் போது, சீரான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாது. எப்போதும் ஒரு நெருக்கடி இருந்து கொண்டே இருக்கும். இவை அனைத்தையும் மீறி இந்திய அணி கேப்டன் தோனி, சிறப்பாக செயல்படுகிறார்...

இந்திய அணியின் புதிய பவுலிங் பயிற்சியாளர்

இந்திய அணியின் புதிய பவுலிங் பயிற்சியாளராக ஜோ டேவ்ஸ் நியமிக்கப்படுகிறார். தற்போதைய பவுலிங் பயிற்சியாளராக தென் ஆப்ரிக்காவின் எரிக் சிம்மன்ஸ் உள்ளார். இவரது இரண்டு ஆண்டுகால பணி, முத்தரப்பு ஒருநாள் தொடருடன் முடிகிறது. இவரது ஒப்பந்தத்தை பி.சி.சி.ஐ., புதுப்பிக்கவில்லை. இவருக்கு பதில் ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோ டேவ்ஸ் நியமிக்கப்படுகிறார். இவர் 1997 முதல் 2005 வரை 76 முதல்தர போட்டிகளில் பங்கேற்றுள்ளார். முழங்காலில் ஏற்பட்ட காயத்தால் தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்க முடியாமல், பயிற்சியாளராக மாறினார். தற்போது தெற்கு ஆஸ்திரேலிய...