சரியாக கணித்த சேவக்

டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதிக்கும் திறமை என்னிடம் உள்ளது என இந்திய வீரர் சேவக் கணித்தார்,'' என, ஆஸ்திரேலியாவின் வார்னர் கூறினார்.

ஆஸ்திரேலியா சென்றுள்ள நியூசிலாந்து அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இதன் முதல் போட்டி, பிரிஸ்பேனில் நாளை துவங்குகிறது.

முதல் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில், ஷேன் வாட்சனுக்குப் பதிலாக இளம் வீரர் டேவிட் வார்னர் அறிமுக வீரராக சேர்க்கப்பட்டுள்ளார்.


இது குறித்து வார்னர் கூறியது:

டெஸ்ட் தொடருக்கான அணியில் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதில் முழுதிறமையையும் வெளிப்படுத்தி சாதிப்பேன். கடந்த 2009ல் ஐ.பி.எல்., போட்டியில், டில்லி அணிக்காக விளையாடினேன்.

அப்போது கேப்டனாக இருந்த சேவக், சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரராக வரும் திறமை என்னிடம் உள்ளதாக சொன்னார். தவிர, போட்டியின் போது, அனைத்து பந்துகளை அடிக்க வேண்டும் என்ற ஆர்வம் மனதில் இருக்கும்.

அதனை கட்டுப்படுத்தி எந்த பகுதியில் அடித்தால் அவுட்டாகாமல் இருப்போம் என்பதை கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும் என்று அறிவுரை கூறினார்.

சேவக் உண்மையிலேயே சிறந்த வீரர். கடந்த இரண்டு ஆண்டுகளாக அவருடைய விளையாட்டை பார்த்து வருகிறேன். அவருடன் இணைந்து பயிற்சி செய்த போது, எந்தளவு அவர் திறமையானவர் என்பதை அறிந்து கொண்டேன்.

இவ்வாறு வார்னர் கூறினார்.

0 comments:

Post a Comment