பாக்., கிரிக்கெட் வீரர்கள் ஊழல்வாதிகள்

பாகிஸ்தான் வீரர்கள் சல்மான் பட், முகமது ஆசிப் மீதான சூதாட்ட புகார் நிரூபணமானது. இவர்கள் லஞ்சம் பெற்றது விசாரணையில் அம்பலமானது. இது, கிரிக்கெட் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக, லார்ட்சில் நடந்த டெஸ்டில் (ஆக., 2010), பாகிஸ்தான் அணியின் அப்போதைய கேப்டன் சல்மான் பட், 27, வேகப்பந்து வீச்சாளர்கள் முகமது ஆசிப், 28, முகமது ஆமிர் 19, ஆகியோர் "ஸ்பாட் பிக்சிங்கில்' ஈடுபட்டனர். இதை "தி நியூஸ் ஆப் தி வேர்ல்டு' என்ற பத்திரிகை, தனது புலனாய்வு மூலம் நிரூபித்தது.

ஐ.சி.சி., தடை:
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில், சல்மான் பட் (10 ஆண்டு), முகமது ஆசிப் (7 ஆண்டு), முகமது ஆமிர் (5 ஆண்டு) ஆகியோர், சர்வதேச போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது.

ஆமிர் ஒப்புதல்:
இந்த மூன்று வீரர்கள் மீதும் சதிசெய்து ஏமாற்றுதல், லஞ்சப்பணம் பெறுதல், போன்ற பிரிவுகளில், லண்டனில் உள்ள "சவுத்வொர்க் கிரவுன்' கோர்ட்டில், வழக்கு தொடரப்பட்டது. இதில், முகமது ஆமிர் தனது குற்றத்தை ஒத்துக் கொண்டதால், இவரிடம் விசாரணை நடக்கவில்லை.

எதிரான ஆதாரங்கள்:
ஆனால் மற்ற இருவரும் தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்தனர். இருப்பினும், சல்மான் பட்-சூதாட்ட ஏஜன்ட் மசார் மஜீத் இடையிலான எஸ்.எம்.எஸ்., தகவல்கள், உரையாடல்கள், உட்பட 13 ஆதாரங்கள் இவர்களுக்கு எதிராக அமைந்தது. இதில் 19 நாட்களாக விசாரணை நடந்தது. முடிவில் 12 பேர் கொண்ட குழு, 16 மணி நேரம், 56 நிமிடங்கள் விவாதித்தது. 20 வது நாளில் 10--2 என்ற மெஜாரிட்டி அளவில், ஒரு மனதாக தீர்ப்பை வாசித்தனர்.

இருவர் குற்றவாளி:
இதில் சல்மான் பட் மீது இரு பிரிவுகளிலும், முகமது ஆசிப் மீது ஒரு பிரிவி<லும் குற்றம் நிரூபிக்கப்பட்டது. இவர்கள் குற்றம் செய்தது உறுதியானது. முகமது ஆசிப் மீதான, லஞ்சப் பணம் பெறுதல் குற்றச்சாட்டு குறித்து, இன்னும் உறுதியான முடிவுக்கு வரவில்லை. தீர்ப்பு வாசிக்கப்பட்ட போது இருவரும் <உணர்ச்சியற்ற நிலையில், அமைதியாக இருந்தனர்.
இவர்களுக்குரிய தண்டனை விவரம், இந்த வாரத்தில் வெளியாகும். அதுவரை இருவரையும் ஜாமினில் விட நீதிபதி குக்கே உத்தரவிட்டார்.
7 ஆண்டு ஜெயில்
சல்மான் பட், முகமது ஆசிப் இருவரும், கிரிக்கெட் விளையாட்டு உலகில், சூதாட்டம் மற்றும் ஊழல் செய்து பிடிபட்டு, முதன் முதலாக ஜெயிலுக்கு செல்ல உள்ளனர். இதில் சல்மான் பட் மீது இருபிரிவுகளில் குற்றம் சுமத்தப்பட்டதால், ஏழு ஆண்டு தண்டனை கிடைக்கும். முகமது ஆசிப்பிற்கு இரு ஆண்டுகள் கிடைக்கும். தவிர, 1960ல் இருந்து செயல்பட்டு வரும் லண்டன் சவுத்வொர்க் கிரவுன் கோர்ட்டில், முதன் முதலாக ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட விளையாட்டு வீரர்கள் இவர்கள் தான்.
சோகமான நாள்

லண்டன் கோர்ட் வெளியிட்ட தீர்ப்பு குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஜாகிர் அபாஸ் கூறுகையில்,"" பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு இது சோகமான நாள். அதேநேரம், நீதி வென்றுள்ளது. இந்த வீரர்கள் ஏதோ தவறு செய்துள்ளனர். இது பாகிஸ்தான், உலக கிரிக்கெட்டுக்கு நல்ல விஷயம் தான். ஏனெனில் இதைக்கண்டு, மற்ற வீரர்கள் பயப்படுவார்கள்,'' என்றார்.

0 comments:

Post a Comment