"A' கிரேடில் கோஹ்லி, இஷாந்த்

பி.சி.சி.ஐ., ஒப்பந்த பட்டியலில் விராத் கோஹ்லி, இஷாந்த் சர்மா ஆகியோருக்கு "ஏ' கிரேடு வழங்கப்பட்டுள்ளது. இதே பிரிவில் யுவராஜ் சிங்கிற்கு மீண்டும் இடம் கிடைத்துள்ளது.

இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,), வீரர்களுக்கு கிரேடு அடிப்படையில் ஆண்டு தோறும் சம்பளம் வழங்கி வருகிறது. இந்த ஆண்டுக்கான புதிய ஒப்பந்த பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதன்படி மொத்தமுள்ள வீரர்களின் எண்ணிக்கை 24ல் இருந்து 36 ஆக உயர்த்தப்பட்டது.

இதில் 11 பேர் "சி' கிரேடில் இடம் பெற்றனர். "ஏ' கிரேடில் 9ல் இருந்து 12 பேராக அதிகரிக்கப்பட்டது. சம்பள விகிதத்தில் ( "ஏ'-ரூ. 1 கோடி, "பி'-ரூ. 50 லட்சம், "சி'-ரூ. 25 லட்சம்) மாறுதல் இல்லை. கடந்த ஆண்டு "பி' கிரேடில் இருந்த யுவராஜ் சிங், "ஏ' கிரேடுக்கு உயர்ந்துள்ளார். புதிதாக விராத் கோஹ்லி, இஷாந்த் சர்மாவும் இதில் இடம் பெற்றுள்ளனர்.


ஹர்பஜன் நீட்டிப்பு:

இங்கிலாந்து தொடரில் இருந்து பாதியில் திரும்பிய ஹர்பஜன் சிங், சொந்த மண்ணில் நடந்த இங்கிலாந்து தொடர், அடுத்த வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கும் தேர்வாகவில்லை. இருப்பினும், இவர் "ஏ' கிரேடில் நீடிக்கிறார். ரெய்னாவும் இந்த பிரிவில் உள்ளார்.


விஜய் பின்னடைவு:

வேகப்பந்து வீச்சாளர் பிரவீண் குமார், பிரக்யான் ஓஜா தொடர்ந்து "பி' கிரேடில் நீடிக்கின்றனர். அஷ்வின், ரோகித் சர்மா, ஜடேஜா ஆகியோர் "சி' கிரேடில் இருந்து "பி' கிரேடுக்கு <உயர்த்தப்பட்டனர். முரளி விஜய், "பி'யில் இருந்து "சி'க்கு தள்ளப்பட்டார். ஆஷிஸ் நெஹ்ரா ஒப்பந்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்டார்.


ஒவ்வொரு கிரேடிலும் இடம் பெற்றுள்ள வீரர்கள்:

"ஏ' கிரேடு (ரூ. 1 கோடி):
தோனி, சச்சின், சேவக், காம்பிர், டிராவிட், லட்சுமண், ரெய்னா, ஹர்பஜன் சிங், ஜாகிர் கான், யுவராஜ் சிங், விராத் கோஹ்லி, இஷாந்த் சர்மா.

"பி' கிரேடு (ரூ. 50 லட்சம்):
பிரவீண் குமார், பிரக்யான் ஓஜா, அஷ்வின், ரோகித் சர்மா, ஜடேஜா.

"சி' கிரேடு (ரூ. 25 லட்சம்):
ஸ்ரீசாந்த், அமித் மிஸ்ரா, புஜாரா, மிதுன், வினய் குமார், ரகானே, முனாப் படேல், முரளி விஜய், சிகர் தவான், பார்த்திவ் படேல், சகா, பத்ரிநாத், மனோஜ் திவாரி, பியுஸ் சாவ்லா, தினேஷ் கார்த்திக், உனத்கட், உமேஷ் யாதவ், ராகுல் சர்மா, வருண் ஆரோன்.


விளையாட்டு மசோதாவுக்கு எதிர்ப்பு

விளையாட்டு அமைப்புகளை கட்டுப்படுத்த கொண்டு வரப்பட்ட, திருத்தப்பட்ட புதிய மசோதாவுக்கும், பி.சி.சி.ஐ., எதிர்ப்பு தெரிவித்தது. பி.சி.சி.ஐ., செயலர் சஞ்சய் ஜக்தலே கூறுகையில்,"" புதிய மசோதாவில் உள்ள சில அம்சங்கள், விளையாட்டு அமைப்புகளின் தன்னாட்சி அதிகாரத்துக்கு ஆபத்து ஏற்படுத்தும். தவிர, உறுப்பினர்களில் அதிகாரத்தையும் குறைக்கும் வகையில் உள்ளது. இம்மசோதாவை முழுவதுமாக எதிர்க்கிறோம்,'' என்றார்.

0 comments:

Post a Comment