அக்தரின் பந்தை எதிர்கொள்ளும்போது சச்சின் கால்கள் நடுங்கியது

ஷாகித் அப்ரிதி, அண்மையில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற ஷோயப் அக்தரின் சச்சின் பற்றிய கருத்தை ஆமோதித்துள்ளார்.

முன்னாள் பாகிஸ்தான் அணித் தலைவரான ஷாகித் அப்ரிதி, ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ் என்று வர்ணிக்கப்பட்ட ஷோயப் அக்தரின் புயல்வேகப் பந்துவீச்சை எதிர்கொள்ளும்போது, சச்சினின் கால்கள் பயத்தால் நடுங்குவதைக் கண்டிருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

அக்தரின் காண்ட்ராவர்ஷியலி யுவர்ஸ் புத்தகத்தில் சச்சின் பற்றி அவர் எழுதிய கருத்து, இரு நாட்டு எல்லையிலும் பெரும் பிரச்னையைக் கிளப்பியது.

அக்தரின் இந்தப் புத்தகம் வெளியாக இருந்த நிகழ்ச்சி, மும்பையில் ரத்து செய்யப்பட்டது. ஆனால், இதற்கெல்லாம் பதிலடி கொடுப்பது போல், அப்ரிதி, அக்தருக்காகப் பரிந்து பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.

அக்தர் உண்மையைத்தான் கூறியிருக்கிறார். சச்சின் டெண்டுல்கர் அவர் பந்துவீச்சுக்கு பயந்தது உண்மை. நான் களத்தில் பீல்டிங் செய்துகொண்டிருந்த நேரத்தில், அக்தரின் பந்துவீச்சை எதிர்கொள்ளும் சச்சினின் கால்கள் பயத்தில் நடுங்குவதைக் கண்டிருக்கிறேன்... என்று தி எக்ஸ்பிரஸ் டிரிபியூன் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் அப்ரிதி கூறியுள்ளார்.

ஒவ்வொரு முறை நெருக்கடி ஏற்படும்போதும் பேட்ஸ்மென்கள் இவ்வாறு நடந்து கொள்வது இயல்பு. பாகிஸ்தானின் ஆப் ஸ்பின்னர் சயீத் அஜ்மல் பந்துவீச்சுக்கும் இப்படி ஒருசூழ்நிலை ஏற்பட்டதுண்டு என்று கூறியிருக்கிறார் அப்ரிதி.

கடந்த 2011 உலகக் கோப்பை நேரத்தில், இந்திய பாகிஸ்தான் அணிகள் மோதிய அரையிறுதிப் போட்டியில், பாகிஸ்தான் விளையாடிய அணியில் அக்தரை சேர்த்துக்கொள்ளவில்லை. அதற்காக அணித்தலைவர் அப்ரிதியை அக்தர் வாய்க்கு வந்தபடி திட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், அவர் அணிக்கு மீண்டும் திரும்பவேண்டும்; அணிக்காக விளையாட வேண்டும். அதற்காக அணி மேலாளரிடம் கேட்டுக்கொள்வேன் என்றும் கூறியிருக்கிறார்.

0 comments:

Post a Comment