ஐ.சி.சி., ரேங்கிங்: இந்தியா நம்பர்-3

ஐ.சி.சி., ஒருநாள் போட்டிக்கான ரேங்கிங் பட்டியலில், இந்திய அணி மூன்றாவது இடத்துக்கு முன்னேறியது.சர்வதேச ஒருநாள் போட்டியில் சிறந்து விளங்கும் அணிகளுக்கான ரேங்கிங் (தரவரிசை) பட்டியலை, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) துபாயில் வெளியிட்டது.

இதில் இந்திய அணி ஐந்தாவது இடத்தில் இருந்து மூன்றாவது இடத்துக்கு 118 புள்ளிகளுடன் முன்னேறியது.

சமீபத்திய இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய அணி 5-0 எனக் கைப்பற்றியதே இம்முன்னேற்றத்துக்கு முக்கிய காரணம்.

ஒருநாள் தொடரை முழுமையாக இழந்த இங்கிலாந்து அணி, நான்காவது இடத்தில் இருந்து ஐந்தாவது இடத்துக்கு 106 புள்ளிகளுடன் பின்தங்கியது.


இந்திய அணி மூன்றாவது இடத்தில் நீடிக்க, நாளை டர்பனில் நடக்கவுள்ள மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி, தென் ஆப்ரிக்காவை வீழ்த்த வேண்டும்.

ஒருவேளை தென் ஆப்ரிக்க அணி வெற்றி பெறும் பட்சத்தில், இந்திய அணி மீண்டும் நான்காவது இடத்துக்கு தள்ளப்படும்.

தவிர தென் ஆப்ரிக்க அணி 120 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்துக்கு முன்னேறிவிடும். இலங்கை அணி (119 புள்ளி), இரண்டாவது இடத்தை தக்கவைத்துக் கொள்ள, அடுத்து வரவுள்ள பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்ற வேண்டும்.

0 comments:

Post a Comment