டுவென்டி-20 தரவரிசை அறிமுகம்

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில் "டுவென்டி-20' போட்டிக்கு தரவரிசை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் இந்திய அணி ஐந்தாவது இடத்தை பெற்றுள்ளது.

டெஸ்ட், ஒருநாள் போட்டிகளில் சிறந்து விளங்கும் அணிகள், வீரர்கள் தரவரிசைதான் இதுவரை வெளியிடப்பட்டு வந்தது.

முதன் முறையாக "டுவென்டி-20' போட்டிக்கும் இது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் படி அணிகள் வரிசையில் முதல் மூன்று இடங்களை இங்கிலாந்து (127 புள்ளி), இலங்கை (126), நியூசிலாந்து (117) அணிகள் பெற்றுள்ளன.

4, 5, 6வது இடங்களில் தென் ஆப்ரிக்கா (113), இந்தியா (112), ஆஸ்திரேலியா (111) உள்ளன. கடைசி மூன்று இடங்களில் பாகிஸ்தான் (97), வெஸ்ட் இண்டீஸ் (89), ஜிம்பாப்வே (54) உள்ளன.

சிறந்த பேட்ஸ்மேன்கள் வரிசையில் முதல் மூன்று இடங்களை இங்கிலாந்தின் இயான் மார்கன் (832), நியூசிலாந்தின் பிரண்டன் மெக்கலம் (799), இங்கிலாந்தின் பீட்டர்சன் (793) உள்ளனர். இந்தியா சார்பில் "டாப்-10' வரிசையில் ரெய்னா (5வது) மட்டும் இடம் பெற்றுள்ளார்.

சிறந்த பவுலர்கள் பட்டியலில் இலங்கையின் மெண்டிஸ் (748), இங்கிலாந்தின் சுவான் (727), பாகிஸ்தானின் சயீத் அஜ்மல் (721) ஆகியோர் முதல் மூன்று இடங்களை பெற்றுள்ளனர்.

"டாப்-30' பவுலர்கள் வரிசையில், இந்தியாவின் ஹர்பஜனைத் (9), தவிர யாருமில்லை.

"ஆல் ரவுண்டர்கள்' வரிசையில் ஆஸ்திரேலியாவின் வாட்சன் (385), டேவிட் ஹசி (316) முதல் மற்றும் மூன்றாவது இடத்திலும், பாகிஸ்தானின் ஓய்வு பெற்ற அப்ரிதி (339), இரண்டாவது இடத்திலும் உள்ளனர். இந்தியாவின் யுவராஜ் சிங் (192) ஆறாவது இடத்தை பெற்றுள்ளார்.

0 comments:

Post a Comment