ஹர்பஜனுக்கு அக்ரம் ஆதரவு

இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணியில் ஹர்பஜன் சிங்கை தேர்வு செய்யாதது ஆச்சர்யம் அளிக்கிறது,'' என, பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார்.

ஐந்து ஒருநாள் போட்டி, ஒரு "டுவென்டி-20' போட்டிகள் கொண்ட தொடரில் (அக்., 14 முதல் 29 வரை) பங்கேற்க இங்கிலாந்து அணி, இந்தியா வருகிறது. இதற்கான முதல் இரு போட்டிகளில் பங்கேற்கும் இந்திய அணியில் இருந்து, ஹர்பஜன் சிங் அதிரடியாக நீக்கப்பட்டார்.

இது குறித்து வாசிம் அக்ரம் கூறியது:

இங்கிலாந்து தொடரில் சிறப்பாக செயல்பட, பெரும் எதிர்பார்ப்புடன் தயாராக இருந்தார் ஹர்பஜன் சிங். இந்நிலையில், இவரை இந்திய அணியில் தேர்வு செய்யாதது ஆச்சர்யம் அளிக்கிறது.

ஒன்று, அல்லது இரண்டு போட்டிகளில் சிறப்பாக செயல்படவில்லை என்பதற்காக, 31 வயது மட்டும் ஆன, அனுபவ வீரரை அணியில் இருந்து நீக்குவது எந்தவிதத்திலும் நியாயம் இல்லை. தேர்வு குழுவினர் இளம் வீரர்கள் மட்டும் போதும் என்று எண்ணி விட்டார்கள் என நினைக்கிறேன்.

சாம்பியன்ஸ் லீக் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணியை சிறப்பான முறையில் வழிநடத்தி செல்கிறார். ஹர்பஜன் சிங்கை எப்போதும் ஒரு கிரிக்கெட் வீரராக, சிறந்த போராளியாகவும் தான் பார்க்கிறேன். இவரது உதவி இந்திய அணிக்கு இன்னும் சில காலங்கள் தேவைப்படும்.

கடந்த 15 ஆண்டுகளாக இந்திய அணிக்காக சேவை புரிந்து வருகிறார். சமீபத்தில் முடிந்த உலககோப்பை தொடரில், இந்திய அணிக்காக சிறப்பான முறையில் பந்து வீசினார். பின்வரிசையில் பேட்டிங்கிலும் அசத்துவது பெரும் பலம். இப்போது அணியில் இருந்து நீக்கப்பட்டது, இவருக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையாக எடுத்துக்கொண்டு, மீண்டும் தன்னை நிரூபித்து அணிக்கு திரும்புவார் என்று <உறுதியாக நம்புகிறேன்.

இவருடைய அனுபவம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் இந்திய அணி சாதிக்க, நிச்சயமாக கைகொடுக்கும். எதிர்வரும் இங்கிலாந்து தொடரில், முன்னணி பவுலர்கள் காயம் அடைந்திருப்பதால், வேகப்பந்து வீச்சிற்கு இந்திய அணி பிரவீண்குமாரையை நம்பியுள்ளது. இதனால் பிரவீண் குமார் பதட்டத்திற்கு ஆளாகலாம்.

இவ்வாறு அக்ரம் கூறினார்.

0 comments:

Post a Comment