சுழற்சி முறையில் வாய்ப்பு - சேவக்

காயத்தில் இருந்து தப்பிக்க, போட்டியில் வீரர்களுக்கு சுழற்சி முறையில் வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும்,'' என, இந்திய அணியின் அதிரடி துவக்க வீரர் சேவக் தெரிவித்துள்ளார்.இந்தியா வரவுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் நவ.,6ம் தேதி டில்லியில் துவங்குகிறது. இப்போட்டிக்கான இந்திய அணியில், தோள்பட்டை காயத்தில் இருந்து மீண்ட அதிரடி துவக்க வீரர் சேவக் இடம் பெற்றுள்ளார். இதுகுறித்து சேவக் கூறியதாவது: காயம், உடற்தகுதி...

"A' கிரேடில் கோஹ்லி, இஷாந்த்

பி.சி.சி.ஐ., ஒப்பந்த பட்டியலில் விராத் கோஹ்லி, இஷாந்த் சர்மா ஆகியோருக்கு "ஏ' கிரேடு வழங்கப்பட்டுள்ளது. இதே பிரிவில் யுவராஜ் சிங்கிற்கு மீண்டும் இடம் கிடைத்துள்ளது.இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,), வீரர்களுக்கு கிரேடு அடிப்படையில் ஆண்டு தோறும் சம்பளம் வழங்கி வருகிறது. இந்த ஆண்டுக்கான புதிய ஒப்பந்த பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதன்படி மொத்தமுள்ள வீரர்களின் எண்ணிக்கை 24ல் இருந்து 36 ஆக உயர்த்தப்பட்டது. இதில் 11 பேர் "சி' கிரேடில் இடம் பெற்றனர்....

இந்திய-பாக்., வீரர்கள் அடிதடி

முத்தரப்பு ஹாக்கி லீக் போட்டியில் இந்திய, பாகிஸ்தான் வீரர்கள் மோதிக் கொண்டதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதில் காயம் அடைந்த இந்திய வீரர் குர்பாஜ் சிங் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.ஆஸ்திரேலியா, இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதும் முத்தரப்பு ஹாக்கி தொடர் ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. பசல்டன் நகரில் நேற்று நடந்த இரண்டாவது லீக் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்திய அணிக்கு துஷார் கண்டேகர், முஜ்தபா, ருபிந்தர் சிங் தலா ஒரு கோல் அடிக்க,...

கேப்டனாக சச்சின் பிரகாசிக்காதது ஏன்?

வயதில் மூத்தவர்களுக்கு சச்சின் மிகுந்த மரியாதை அளிப்பார். அவர்கள் சொல்வதை அமல்படுத்துவது தனது கடமை என நினைத்தார். இப்படி நிறைய பேரின் ஆலோசனைகளை கேட்டு செயல்பட்டதால் தான், கேப்டனாக பிரகாசிக்க முடியவில்லை,''என, பி.சி.சி.ஐ., முன்னாள் செயலர் ஜெயவந்த் லீலே தெரிவித்துள்ளார்.இந்திய அணியின் நட்சத்திர வீரர் சச்சின். "பேட்டிங்கில்' எண்ணற்ற சாதனைகள் படைத்துள்ளார். ஆனால், கேப்டனாக ஏமாற்றம் அளித்தார். கடந்த 1996ல் அணிக்கு தலைமையேற்ற இவர், 25 டெஸ்டில் 9 தோல்வியை...

ஐ.சி.சி., ரேங்கிங்: இந்தியா நம்பர்-3

ஐ.சி.சி., ஒருநாள் போட்டிக்கான ரேங்கிங் பட்டியலில், இந்திய அணி மூன்றாவது இடத்துக்கு முன்னேறியது.சர்வதேச ஒருநாள் போட்டியில் சிறந்து விளங்கும் அணிகளுக்கான ரேங்கிங் (தரவரிசை) பட்டியலை, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) துபாயில் வெளியிட்டது. இதில் இந்திய அணி ஐந்தாவது இடத்தில் இருந்து மூன்றாவது இடத்துக்கு 118 புள்ளிகளுடன் முன்னேறியது. சமீபத்திய இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய அணி 5-0 எனக் கைப்பற்றியதே இம்முன்னேற்றத்துக்கு முக்கிய காரணம்....

கங்குலிக்கு அனுமதி மறுப்பு

ஈடன் கார்டன் மைதானத்துக்குள் நுழைந்த முன்னாள் இந்திய கேப்டன் சவுரவ் கங்குலியை பார்த்து, ஐ.சி.சி., அதிகாரி ஒருவர் "யார் நீங்கள்?' எனக் கேட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான கடைசி ஒருநாள் போட்டி கோல்கட்டாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்தது. இப்போட்டி துவங்குவதற்கு முன், "பிட்ச் ரிப்போர்ட்' கொடுப்பதற்காக மைதானத்திற்குள் நுழைந்த உள்ளூர் "ஹீரோ'வும், வர்ணனையாளருமான கங்குலியை, ஐ.சி.சி.,யின் ஊழல் தடுப்பு அதிகாரி தர்மேந்தர்...

டுவென்டி-20 தரவரிசை அறிமுகம்

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில் "டுவென்டி-20' போட்டிக்கு தரவரிசை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் இந்திய அணி ஐந்தாவது இடத்தை பெற்றுள்ளது.டெஸ்ட், ஒருநாள் போட்டிகளில் சிறந்து விளங்கும் அணிகள், வீரர்கள் தரவரிசைதான் இதுவரை வெளியிடப்பட்டு வந்தது. முதன் முறையாக "டுவென்டி-20' போட்டிக்கும் இது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் படி அணிகள் வரிசையில் முதல் மூன்று இடங்களை இங்கிலாந்து (127 புள்ளி), இலங்கை (126), நியூசிலாந்து (117) அணிகள் பெற்றுள்ளன....

சச்சின் மாளிகையை பார்க்கலாமா...

மும்பை செல்லும் அனைவரும், சச்சினின் புதிய சொகுசு மாளிகையை பார்க்க செல்கின்றனர். இதனால், சச்சினின் வீடு விரைவில் சுற்றுலா மையமாக மாறினாலும் ஆச்சரியம் இல்லை.இந்திய கிரிக்கெட் அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின். இதுவரை 181 டெஸ்ட் ((14,965 ரன்கள்), 453 ஒருநாள் (18,111 ரன்கள்) போட்டிகளில் பங்கேற்றுள்ள இவர், விரைவில் 100 வது சதம் அடிக்க காத்திருக்கிறார்.இதனிடையே, மும்பையில் 5 மாடிகள் கொண்ட சொகுசு மாளிகையில் சச்சின் சமீபத்தில் குடியேறினார். விநாயர் கோயில்,...

ஏமாற்றம் அளித்த பீல்டிங்

மூன்று ஒரு நாள் போட்டிகளிலும் இங்கிலாந்து அணியின் "பீல்டிங்' மோசமாக இருந்தது,'' என, இங்கிலாந்து கேப்டன் குக் தெரிவித்துள்ளார்.இந்தியா, இங்கிலாந்து அணிகள் ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் மோதுகின்றன. முதல் மூன்று போட்டிகளில் வென்ற இந்திய அணி, தொடரை வென்றது.இது குறித்து குக் கூறியது:முதல் இரண்டு போட்டிகளை காட்டிலும், மூன்றாவது போட்டியில் எங்களது பேட்டிங், பவுலிங்கில் முன்னேற்றம் காணப்பட்டது. "உலக சாம்பியன்' இந்திய அணிக்கு எதிராக 298 ரன்கள் எடுப்பது என்பது சாதாரண விஷயம் அல்ல. நல்ல இலக்கினை தான் நிர்ணயித்தோம். ஆனால் "பீல்டிங்கில்' தவறு செய்ததால்...

பழிவாங்கும் படலமா?: கேப்டன் தோனி மறுப்பு

இங்கிலாந்துக்கு எதிரான தொடரை பழிவாங்கும் படலமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. விளையாட்டில் இந்த வார்த்தை மிகவும் கடினமானது,'' என, இந்திய அணி கேப்டன் தோனி தெரிவித்துள்ளார்.சமீபத்தில் இங்கிலாந்து சென்ற இந்திய அணி டெஸ்ட், ஒருநாள் மற்றும் "டுவென்டி-20' போட்டித் தொடரில் ஒரு வெற்றிகூட பெறாமல், வெறுங்கையுடன் திரும்பியது. இதற்கு, தற்போதைய இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் பதிலடி கொடுத்தது. தொடரை 3-0 என வென்று பழிதீர்த்தது.இதுகுறித்து கேப்டன் தோனி கூறியது:விளையாட்டு...

சச்சின் புதிய வீட்டுக்கு அபராதம்

சச்சின் தனது புதிய வீட்டிற்கு முறைப்படி குடியிருப்பு அனுமதி சான்றிதழ் பெறவில்லை. இதற்காக, மும்பை மாநகராட்சிக்கு ரூ. 4.35 லட்சம் அபராதம் செலுத்தினார். இந்திய கிரிக்கெட் அணியின் சாதனை நாயகன் சச்சின். இவர், மும்பை புறநகர் பகுதியான பந்த்ராவில் உள்ள பெர்ரி கிராஸ் ரோட்டில் பிரம்மாண்ட வீடு ஒன்றை கட்டினார். இங்கு சமீபத்தில் குடியேறினார். ஆனால், வீட்டில் நிரந்தரமாக குடியிருப்பதற்கான தகுதி சான்றிதழை பெறவில்லை. இதையடுத்து மாநகராட்சி விதிமுறைகளை சச்சின் மீறியதாக...

முதல் இடத்தில் நீடிப்பது கடினம்

"டென்னிஸ் அரங்கில் முதல் இடத்தில் நீடிப்பது மிகவும் கடினம், என, டென்மார்க் வீராங்கனை வோஸ்னியாக்கி தெரிவித்துள்ளார்.சர்வதேச டென்னிஸ் "ரேங்கிங் பட்டியலில் "நம்பர்-1 இடத்தில் உள்ளார் வோஸ்னியாக்கி. சமீபத்தில் நடந்த யு.எஸ்., ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதியில் அமெரிக்காவின் செரினா வில்லியம்சிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். இதனால் முதலிடத்தை இழக்கும் வாய்ப்பு உள்ளது.இது குறித்து வோஸ்னியாக்கி கூறியது:முதல் இடத்தை தக்க வைப்பது என்பது சாதாரண விஷயம் அல்ல. இது மிகவும் கடினமானது. முதல் இடத்திற்கு முன்னேறிய போது எல்லையில்லா ஆனந்தம் அடைந்தேன். நீண்ட நாள் உழைப்பிற்கு...

குழப்பமான புதிய விதிமுறை: கோஹ்லி

ஐ.சி.சி., அறிமுகப்படுத்தி உள்ள ஒருநாள் போட்டிக்கான புதிய விதிமுறை குழப்பமாக உள்ளது,'' என, இந்திய வீரர் விராத் கோஹ்லி தெரிவித்துள்ளார்.சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,), சமீபத்தில் ஒருநாள் போட்டிக்கான விதிமுறையை தற்போது நடக்கும் இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு ஒருநாள் தொடரில் அறிமுகம் செய்தது. இதன்படி, ஒரு இன்னிங்சில் இரண்டு பந்துகள், "பவுர்பிளே' நிபந்தனை, "ரன்னர்' கிடையாது, உள்ளிட்ட பல புதிய முறைகள் பின்பற்றப்பட்டன.இதுகுறித்து இந்திய "மிடில்-ஆர்டர்'...

பயிற்சியை துவக்கினார் சச்சின்

காயம் காரணமாக ஓய்வில் இருந்த சச்சின், நேற்று மும்பையில் பேட்டிங் பயிற்சியை துவக்கினார். இங்கிலாந்து சென்ற இந்திய அணியில் இடம் பெற்றவர் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின். ஒரு நாள் தொடர் துவங்க இருந்த நேரத்தில், ஏற்கனவே ஆப்பரேஷன் செய்திருந்த இவரது கால் பெருவிரலில், லேசாக வீக்கம் ஏற்பட்டது. தொடர்ந்து வீக்கமும், வலியும் அதிகரித்ததால், இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்காமல் நாடு திரும்பினார்.இது குறித்து லண்டனில் உள்ள, "ஸ்பெஷலிஸ்ட்' டாக்டர் ஜேம்ஸ்...

ஐந்தாவது ஐ.பி.எல் தொடர் தேதி அறிவிக்கப்பட்டது

ஐந்தாவது ஐ.பி.எல்., தொடர் அடுத்த ஆண்டு (ஏப்., 4- மே. 27) நடக்கும். இதன் துவக்க விழா சென்னையில் நடைபெறும் என நேற்று அறிவிக்கப்பட்டது.இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) சார்பில் ஆண்டுதோறும் உள்ளூர் "டுவென்டி-20' தொடர் நடத்தப்படுகிறது. ஐந்தாவது தொடருக்கான தேதி, துவக்க விழா நடக்கும் இடம் ஆகியவை நேற்று அறிவிக்கப்பட்டது.ஐதராபாத்தில் ஐ.பி.எல்., நிர்வாக கவுன்சில் கூட்டம், அதன் தலைவர் ராஜிவ் சுக்லா தலைமையில் நேற்று நடந்தது.இக்கூட்டத்திற்கு பின் ராஜிவ் சுக்லா...

ரேங்கிங் : இந்தியா முன்னேறுமா?

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை, வெல்லும் பட்சத்தில் இந்திய அணி "ரேங்கிங்' பட்டியலில் முன்னேற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.ஒருநாள் அணிகள் தரவரிசை பட்டியலில் இந்திய அணி (112 புள்ளி) ஐந்தாவது இடத்தில் உள்ளது. முதல் நான்கு இடங்களில் ஆஸ்திரேலியா (130), இலங்கை (119), தென் ஆப்ரிக்கா (116) மற்றும் இங்கிலாந்து (113) அணிகள் உள்ளன.இதனிடையே நாளை துவங்கும் தொடரில், இந்திய அணி வெல்லும் பட்சத்தில் இந்திய அணி நான்காவது இடத்தை பிடிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அதேநேரம், தென் ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான ஒருநாள் தொடரின் முடிவுக்கு ஏற்ப, இந்த வரிசையில் மேலும்...

ரேங்கிங் : இந்தியா முன்னேறுமா?

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை, வெல்லும் பட்சத்தில் இந்திய அணி "ரேங்கிங்' பட்டியலில் முன்னேற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.ஒருநாள் அணிகள் தரவரிசை பட்டியலில் இந்திய அணி (112 புள்ளி) ஐந்தாவது இடத்தில் உள்ளது. முதல் நான்கு இடங்களில் ஆஸ்திரேலியா (130), இலங்கை (119), தென் ஆப்ரிக்கா (116) மற்றும் இங்கிலாந்து (113) அணிகள் உள்ளன.இதனிடையே நாளை துவங்கும் தொடரில், இந்திய அணி வெல்லும் பட்சத்தில் இந்திய அணி நான்காவது இடத்தை பிடிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அதேநேரம், தென் ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான ஒருநாள் தொடரின் முடிவுக்கு ஏற்ப, இந்த வரிசையில் மேலும்...

ஐ.பி.எல்.லில் பாகிஸ்தான் வீரர்கள்

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் வீரர்களை சேர்ப்பது குறித்து வரும் 14-ம் தேதி நிர்வாகக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்று ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்தார்.2008-ம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தான் வீரர்கள் பணம் கொழிக்கும் ஐபிஎல் போட்டியில் சேர்க்கப்படவில்லை.இந்த நிலையில் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீலுடன் ஸ்விட்சர்லாந்து, ஆஸ்திரியா ஆகிய நாடுகளுக்கு சென்றுவிட்டு...

பைனலில் இளம் இந்திய அணி

நான்கு நாடுகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியில், இளம் இந்திய அணி (19 வயது) கடைசி லீக் போட்டியில், வெஸ்ட் இண்டீசை 81 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதையடுத்து நாளை நடக்கும் பைனலில் இந்தியா, இலங்கை அணிகள் மோதுகின்றன.இந்தியா, இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலியாவின் 19 வயதுக்குபட்ட வீரர்கள் பங்கேற்கும் ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஆந்திராவில் நடக்கிறது. நேற்று நடந்த போட்டியில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின.முதலில் விளையாடிய இந்திய அணிக்கு...

இந்தியா-இங்கிலாந்து தொடரில் "ஹாட் ஸ்பாட்' இல்லை

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரில், "ஹாட் ஸ்பாட்' தொழில்நுட்பம் பயன்படுத்தப் போவதில்லை,'' என, இத்தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்திய பி.பி.ஜி., ஸ்போர்ட்ஸ் நிறுவன தலைமை அதிகாரி வாரன் பிரன்ணன் தெரிவித்துள்ளார்.இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி ஐந்து ஒருநாள் மற்றும் ஒரே ஒரு "டுவென்டி-20' போட்டி கொண்ட தொடரில் பங்கேற்கிறது. ஒருநாள் தொடரின் முதல் போட்டி அக்.14ம் தேதி ஐதராபாத்தில் நடக்கிறது.புதிய தொழில்நுட்பம்:சமீபகாலமாக சர்வதேச கிரிக்கெட்...

நடையை கட்டியது நடப்பு சாம்பியன்

சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20' தொடரில் இருந்து, "நடப்பு சாம்பியன்' சென்னை கிங்ஸ் வெளியேறியது. நேற்று நடந்த கடைசி லீக் போட்டியில், 46 ரன்கள் வித்தியாசத்தில் பரிதாபமாக வீழ்ந்தது. வார்னர் அதிரடி சதம் கைகொடுக்க, வெற்றிபெற்ற நியூ சவுத் வேல்ஸ் அணி அரையிறுதிக்கு முன்னேறியது.மூன்றாவது சாம்பியன்ஸ் லீக் தொடரின் "ஏ' பிரிவு கடைசி லீக் போட்டி நேற்று சென்னையில் நடந்தது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், நியூ சவுத்வேல்ஸ் அணிகள் மோதின. "டாஸ்' வென்ற காடிச், பேட்டிங் தேர்வு...