மூவர் கூட்டணிக்கு செல்வாக்கு

ஐ.சி.சி., இரண்டு நாள் கூட்டம் இன்று துபாயில் துவங்குகிறது. இதில், வலிமையான இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து கிரிக்கெட் போர்டுகளின் கட்டுப்பாட்டில் ஐ.சி.சி., கொண்டு வரப்படும் எனத் தெரிகிறது. 

கடந்த 1909ல் துவங்கப்பட்ட சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் (ஐ.சி.சி.,), மொத்தம் 106 நாடுகள் உறுப்பினராக உள்ளன. இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட 10 நாடுகள் நிரந்தர உறுப்பினர்கள்.      

ஐ.சி.சி.,க்கு கிடைக்கும் 75 சதவீத வருமானம், இந்தியா, ஆஸ்திரேலியா, இலங்கை உள்ளிட்ட 10 நிரந்தர உறுப்பினர்களுக்கு சம அளவில் பிரித்து தரப்படுகிறது. ஆனால், இந்திய அணி பங்கேற்கும் போட்டிகளில் தான் அதிக வருமானம் கிடைக்கிறது. ஜிம்பாப்வே உள்ளிட்ட அணிகள் ஆண்டுக்கு குறைவான போட்டிகளில் பங்கேற்ற போதும், சமமான தொகை தான் கிடைத்தன.      


முதல் எதிர்ப்பு: 

இதற்கு பி.சி.சி.ஐ., எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து ஐ.சி.சி.,யில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என, கோரிக்கை வைத்தது. இதன் படி, நிதி, வர்த்தகம், நிர்வாகம் தொடர்பாக, புதிய பரிந்துரைகள் வைக்கப்பட்டன.

 இதை இந்தியாவுடன் இணைந்து, கிரிக்கெட் ஆஸ்திரேலியா (சி.ஏ.,), இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் போர்டுகள் (இ.சி.பி.,) முன்மொழிந்தன.      


முழுக் கட்டுப்பாடு: 

இது நிறைவேறும் பட்சத்தில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து நாடுகளின் கட்டுப்பாட்டுக்குள் ஐ.சி.சி., வந்துவிடும். இந்த தீர்மானத்துக்கு, 10ல் 7 நிரந்த உறுப்பு நாடுகள் ஆதரவு தேவை. 

வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்து அணிகள் இந்தியாவுக்கு ஆதரவாக தென் ஆப்ரிக்கா, இலங்கை போர்டுகள் வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவித்தன. பெரும்பாலான நாடுகள் என்ன செய்வது என முடிவு செய்யாமல் உள்ளன. இருப்பினும், புதிய செயல்திட்டத்தை எப்படியும் தடுப்பர் என்றே தெரிகிறது.  

    
பி.சி.சி.ஐ., மிரட்டல்: 

அதேநேரம், இந்த தீர்மானம் நிறைவேறுவதைப் பொறுத்து தான், அடுத்து வரும் 50 ஓவர், ‘டுவென்டி-20’ உலக கோப்பை தொடர்களில் பங்கேற்பது குறித்து இந்திய அணி முடிவு செய்யும் என, பி.சி.சி.ஐ., தெளிவாகத் தெரிவித்துவிட்டதாம். எதிர்கால அட்டவணை குறித்து சம்பந்தப்பட்ட போர்டுகளுடன், பி.சி.சி.ஐ., நேரிடையாக விவாதிக்கத் துவங்கி விட்டது.    
  
இந்தியா எந்த அணிகளுடன் இனி விளையாடப் போகிறது என்பது குறித்து முடிவு செய்து, ஐ.சி.சி.,யிடம் தெரிவிக்கும் நிலைக்கு வந்தாயிற்று. இதனால், இன்று ஐ.சி.சி., கூட்டத்தில் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.      

0 comments:

Post a Comment