உலக கிரிக்கெட்டில் தற்போதுள்ள இந்திய அணி சிறந்த இளம் வீரர்களை கொண்டது என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டனும், டெலிவிஷன் வர்ணனையாளருமான இயன் செப்பல் கூறடியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:–
இந்திய கிரிக்கெட் அணியில் ஷிகார்தவான், வீராட் கோலி. புஜாரா, ரோகித் சர்மா போன்ற திறமை வாய்ந்த இளம்வீரர்கள் உள்ளனர். இதேபோல உம்டுகட் போன்ற எதிர்கால வீரரும் இருக்கிறார்கள்.
தவான் சிறந்த அதிரடி தொடக்க வீரர் ஆவார். அவர் திறமை வாய்ந்தவர். இந்திய அணியில் விலை மதிப்புமிக்க வீரர் ஆவார். தற்போதுள்ள இந்திய அணி தலைசிறந்த இளம் வீரர்களை கொண்ட உலகின் சிறந்த அணியாக திகழ்கிறது.
2015–ம் ஆண்டு உலக கோப்பையை கருத்தில் கொண்டு ஒவ்வொரு அணியும் இப்போதே சிறந்த வீரர்களை உருவாக்கி வருகிறது.
இவ்வாறு இயன்சேப்பல் கூறியுள்ளார்.
இவர் ஆஸ்திரேலிய அணிக்காக 16 ஆண்டு காலம் 75 டெஸ்ட் மற்றும் 15 ஒருநாள் போட்டியில் விளையாடி இருக்கிறார்.
0 comments:
Post a Comment