நியூசி., மண்ணில் சாதிக்குமா இந்தியா?



அன்னிய மண்ணில் வெற்றி வாகை சூடும் இலக்குடன் தோனி தலைமையிலான இந்திய அணி வீரர்கள், நேற்று நியூசிலாந்துக்கு புறப்பட்டுச் சென்றனர்.

நியூசிலாந்துக்கு எதிராக இந்திய அணி 5 ஒருநாள், 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் ஒருநாள் போட்டி வரும் 19ல் நேப்பியரில் துவங்குகிறது. டெஸ்ட் தொடருக்கு முன் இரண்டு நாள் (பிப்., 2,3) பயிற்சி போட்டியிலும் இந்திய அணி விளையாடுகிறது.

இத்தொடரில் பங்கேற்கும் 16 பேர் கொண்ட இளம் இந்திய அணி நேற்று மும்பையில் இருந்து நியூசிலாந்துக்கு கிளம்பியது.

டெஸ்ட் ‘ஸ்பெஷலிஸ்ட்’ வீரர்களான புஜாரா, ஜாகிர் கான், முரளி விஜய், உமேஷ் யாதவ் ஆகியோர் ஒருவாரம் கழித்து தான் நியூசிலாந்து செல்ல உள்ளனர்.

பொதுவாக இந்திய அணி உள்ளூரில் அசத்தும்; வெளிநாடுகளில் சொதப்பும். சமீபத்தில் தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக கூட படுதோல்வியை சந்தித்தது. இந்த நிலை மாற வேண்டும். 

நியூசிலாந்து மண்ணில் விராத் கோஹ்லி, ரகானே, ரெய்னா உள்ளிட்ட இளம் வீரர்கள் எழுச்சி பெறும்பட்சத்தில் இந்திய அணி முத்திரை பதிக்கலாம்.

ஒருநாள் அணி விவரம்: தோனி (கேப்டன்), ஷிகர் தவான், ரோகித் சர்மா, விராத் கோஹ்லி, ரகானே, அம்பதி ராயுடு, ரெய்னா, அஷ்வின், ரவிந்திர ஜடேஜா, புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, இஷாந்த் சர்மா, அமித் மிஸ்ரா, ஈஸ்வர் பாண்டே, பின்னி, ஆரோன்.

டெஸ்ட் அணியில், ரெய்னா, அமித் மிஸ்ரா, பின்னி, ஆரோன் ஆகியோருக்கு பதில் புஜாரா, முரளி விஜய், ஜாகிர் கான், உமேஷ் யாதவ், சகா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

0 comments:

Post a Comment