ஐ.பி.எல். ஏலத்தில் முன்னணி வீரர்கள்



7–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் ஏலம் பிப்ரவரி 12–ந் தேதி நடக்கிறது.

இந்தப் போட்டியில் ஒவ்வொரு அணியில் 5 வீரர்களை தக்க வைத்துக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது. இதன்படி டெல்லி டேர்டெவில்ஸ் அணியை தவிர மற்ற 7 அணிகளும் 24 வீரர்களை நீட்டித்து உள்ளது.

சென்னை சூப்பர்கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய 3 அணிகள் மட்டும் தான் 5 வீரர்களை தக்க வைத்துக் கொண்டது.

டோனி, ரெய்னா, ஜடேஜா, அஸ்வின், பிராவோ, (சென்னை) ரோகித்சர்மா, ஹர்பஜன்சிங், அம்பதி ராயுடு, போலார்ட், மலிங்கா, (மும்பை), ரகானே, ஸ்டுவர்ட் பின்னி, சஞ்சு சாம்சன், வாட்சன், பில்க்னெர், (ராஜஸ்தான்), கோலி, கெய்ல், டிவில்லியம்ஸ் (பெங்களூர்), டேவிட் மில்லர், (பஞ்சாப்) காம்பீர், சுனில் நரின் (கொல்கத்தா) ஹிகார் தவான், ஸ்டெயன் (ஐதராபாத்) ஆகிய வீரர்கள் நீட்டிக்கப்பட்டுள்ளனர்.

அணியில் நீட்டிக்கப்படாத பல முன்னணி வீரர்கள் ஏலப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். முதல்நிலை பட்டியலில் டேவிட் வார்னர், பீட்டர்சன், ஆரான் பிஞ்ச், ஜான்சன், ஷார்மார்ஷ், குயின்டன் காக், கோரி ஆண்டர்சன், ஸ்டீவ் சுமித், டுபெலிசிஸ், மார்னே மார்கல், வெயன் சுமித், போன்ற வீரர்கள் இடம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்க படுகிறது.

இந்திய வீரர்களில் ஷேவாக், யுவராஜ்சிங், முரளி விஜய் ஆகியோரும் முதல் நிலையில் இருப்பார்கள்.

36 பந்தில் சதம் அடித்து உலக சாதனை படைத்த நியூசிலாந்து வீரர் கோரி ஆண்டர்சனை ஏலம் எடுக்க கடும் போட்டி நிலவலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டெல்லி அணி எந்த வீரரையும் தக்க வைத்து கொள்ளாததால் ஏலத்தில் ரூ.60 கோடி செலவிடலாம். இதனால் அந்த அணி எந்த விலை கொடுத்தாலும் முன்னணி வீரர்களை வாங்க போராடும்.

இதே போல, 20 ஓவர் போட்டிக்கான எஸ்பெ சலிஸ்ட் வீரர்களான ஆரோன் பிஞ்ச் (ஆஸ்திரேலியா), குயிண்டன் காக் (தென் ஆப்பிரிக்கா), ஆகியோருக்கும் அதிக மவுசு இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

தமிழகத்தை சேர்ந்த முரளிவிஜயை சென்னை சூப்பர் கிங்ஸ் ஏலத்தில் எடுத்து தக்க வைத்துக் கொள்ளலாம். இல்லையென்றால் ஜோகர் கார்டை பயன்படுத்தும்.

0 comments:

Post a Comment