அதலபாதாளத்தில் இந்திய பவுலர்கள்

ஒருநாள் போட்டிகளில் இந்திய பவுலர்களின் செயல்பாடு படுமோசமாக உள்ளது. சமீபத்திய 20 போட்டிகளில் 250 அல்லது அதற்கு மேலான ரன்களை வாரி வழங்கியுள்ளனர். கடந்த 2011ல் நடந்த உலக கோப்பையை தோனி தலைமையிலான இந்திய அணி வென்றது. தொடர்ந்து  சொந்தமண்ணில் நடந்த இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 ஒருநாள் தொடர்களை கைப்பற்றியது. அதேநேரம், அன்னிய மண்ணில் பங்கேற்ற இரு நாடுகளுக்கு இடையிலான தொடரில் இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து...

இந்தியாவின் பிடியில் உலக கிரிக்கெட்

ஐ.சி.சி., கூட்டத்தில் பெரும்பாலான தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேறிய நிலையில், இந்தியாவின் பிடியில் உலக கிரிக்கெட் வருகிறது. ஐ.சி.சி., புதிய தலைவராக, சீனிவாசன் தேர்வு செய்யப்பட உள்ளார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் (ஐ.சி.சி.,), இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய ‘டாப்–3’ நாடுகள் ஆதிக்கம் செலுத்தும் வகையில், புதிய பரிந்துரைகள் உருவாக்கப்பட்டன.  இதன்படி, லாபத்தில் இந்த மூன்று நாடுகளுக்கும் அதிக பங்கு தரப்படும். மற்றநாடுகளுக்கு,...

மூவர் கூட்டணிக்கு செல்வாக்கு

ஐ.சி.சி., இரண்டு நாள் கூட்டம் இன்று துபாயில் துவங்குகிறது. இதில், வலிமையான இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து கிரிக்கெட் போர்டுகளின் கட்டுப்பாட்டில் ஐ.சி.சி., கொண்டு வரப்படும் எனத் தெரிகிறது.  கடந்த 1909ல் துவங்கப்பட்ட சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் (ஐ.சி.சி.,), மொத்தம் 106 நாடுகள் உறுப்பினராக உள்ளன. இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட 10 நாடுகள் நிரந்தர உறுப்பினர்கள்.       ஐ.சி.சி.,க்கு கிடைக்கும் 75 சதவீத வருமானம், இந்தியா, ஆஸ்திரேலியா, இலங்கை உள்ளிட்ட 10 நிரந்தர உறுப்பினர்களுக்கு...

நாளை 4வது போட்டி- வெற்றி கட்டாயத்தில் இந்தியா

டோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.  இரு அணிகள் இடையேயான 5 ஒருநாள் போட்டித் தொடரில் முதல் ஆட்டத்தில் 24 ரன்னிலும், 2–வது ஆட்டத்தில் 15 ரன்னிலும் இந்திய அணி தோற்றது. 3–வது போட்டி ‘டை’ ஆனது. இந்தியா 0–2 என்ற கணக்கில் பின்தங்கி உள்ளது. இந்தியா–நியூசிலாந்து அணிகள் மோதும் 4–வது ஒருநாள் போட்டி ஹேமில்டனில் நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. தொடரை இழக்காமல் இருக்க இந்த ஆட்டத்தில்...

தோனி மீது பிஷன் சிங் பேடி தாக்கு

இந்திய கிரிக்கெட் போர்டிடம் (பி.சி.சி.ஐ.,) இருந்து, அதிகாரம் மற்றும் சலுகைகளை அனுபவித்து வரும் ஒரே கேப்டன் தோனி தான்,’’ என, பிஷன் சிங் பேடி தெரிவித்தார். இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டன் தோனி. 2007ல் ‘டுவென்டி–20’, 2011ல் 50 ஓவர் போட்டிகளில் உலக கோப்பை வென்று தந்தார். 2013ல் சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றினார்.  இதனால், கிரிக்கெட் உலகம் தோனியை புகழ்கிறது. ஆனால், இவரை கடுமையாக விமர்சித்துள்ளார், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் பிஷன்...

நம்பர் 1 மகுடத்தை இழந்தது இந்தியா

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதனால், தரவரிசையில் ‘நம்பர்–1’ இடத்தை இழந்தது.  நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி, முதலில் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் தோல்வியடைந்த இந்திய அணி, 0–-1 என பின்தங்கியிருந்தது.  இரு அணிகள் மோதிய இரண்டாவது ஒருநாள் போட்டி ஹாமில்டனில் நடந்தது. ‘டாஸ்’ வென்ற இந்திய கேப்டன் தோனி, முதலில் ‘பீல்டிங்’...

துவக்க வீரராக களமிறங்கினால் ஜொலிப்பாரா கோஹ்லி?

தொடர்ந்து சொதப்பும் ரோகித் சர்மாவுக்குப் பதில், விராத் கோஹ்லியை துவக்க வீரராக களமிறக்கலாம் என்று ஆலோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 1994ல் நியூசிலாந்து சென்றது இந்திய அணி.  அப்போது,நேப்பியரில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தது. இதில் துவக்க வீரராக இருந்த சித்து காயமடைய, இரண்டாவது போட்டியில் யாரை துவக்கத்துக்கு களமிறக்குவது என, குழப்பம் ஏற்பட்டது.        அதுவரை 4, 5, 6 வது இடங்களில் களமிறங்கி...

வீராட் கோலி உலக சாதனை

இந்தியா கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 5 ஒருநாள் போட்டி கொண்ட தொடரின் முதல் போட்டி நேற்று நேப்பியரில் நடைபெற்றது.  இதில் இந்தியா அணி 24 ரன்னில் தோல்வியடைந்தது. இப்போட்டியில் இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரம் இளம் வீர் வீராட் கோலி சதம் அடித்தும் இந்தி அணி தோல்வியைத் தழுவியது.  இப்போட்டியில் அடித்து சதம் மூலம் 18 சதங்களை வேகமாக அடித்த வீரர் என்ற சாதைனைக்கு கோலி சொந்தமானார்.  தனது...

நியூசி., வெற்றி - கோஹ்லி சதம் வீண்

இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  விராத் கோஹ்லி சதம் வீணானது. நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி 5 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்கிறது. முதல் போட்டி நேப்பியரில் இன்று துவங்குகியது. இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் தோனி முதலில் பீல்டிங் தேர்வு செய்தார்.  நியூசிலாந்து அணிக்கு கப்டில் (8), ரைடர் (18) சொதப்பல் துவக்கம் அளித்தனர். தொடர்ந்து வந்த ராஸ் டெய்லர் (55),...

சிக்கல் சென்னை - பிரிமியர் சூதாட்டத்தில் திருப்பம்

பிரிமியர் கிரிக்கெட் சூதாட்டம் குறித்த மூன்று நீதிபதிகள் கொண்ட விசாரணைக் குழு, பிப்., 10ல் அறிக்கையை தாக்கல் செய்கிறது. இதில், ‘சென்னை அணியை தடை செய்ய வேண்டும்,’ என, பரிந்துரைக்க இருப்பதாக தெரிகிறது. ஆறாவது பிரிமியர் கிரிக்கெட் தொடரில் நடந்த சூதாட்டம் தொடர்பாக, இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) தலைவர் சீனிவாசன் மருமகன் குருநாத் மெய்யப்பன் சிக்கினார். இதுகுறித்து விசாரிக்க, பி.சி.சி.ஐ., சார்பில் ஓய்வு பெற்ற நீதிபதிகள் பாலசுப்ரமணியன்,...

இளம் வீரர்களை கொண்ட சிறந்த அணி இந்தியா

உலக கிரிக்கெட்டில் தற்போதுள்ள இந்திய அணி சிறந்த இளம் வீரர்களை கொண்டது என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டனும், டெலிவிஷன் வர்ணனையாளருமான இயன் செப்பல் கூறடியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:– இந்திய கிரிக்கெட் அணியில் ஷிகார்தவான், வீராட் கோலி. புஜாரா, ரோகித் சர்மா போன்ற திறமை வாய்ந்த இளம்வீரர்கள் உள்ளனர். இதேபோல உம்டுகட் போன்ற எதிர்கால வீரரும் இருக்கிறார்கள். தவான் சிறந்த அதிரடி தொடக்க வீரர் ஆவார். அவர் திறமை வாய்ந்தவர். இந்திய அணியில் விலை மதிப்புமிக்க வீரர் ஆவார். தற்போதுள்ள இந்திய அணி தலைசிறந்த இளம் வீரர்களை கொண்ட உலகின் சிறந்த அணியாக...

ஐ.பி.எல். ஏலத்தில் முன்னணி வீரர்கள்

7–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் ஏலம் பிப்ரவரி 12–ந் தேதி நடக்கிறது. இந்தப் போட்டியில் ஒவ்வொரு அணியில் 5 வீரர்களை தக்க வைத்துக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது. இதன்படி டெல்லி டேர்டெவில்ஸ் அணியை தவிர மற்ற 7 அணிகளும் 24 வீரர்களை நீட்டித்து உள்ளது. சென்னை சூப்பர்கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய 3 அணிகள் மட்டும் தான் 5 வீரர்களை தக்க வைத்துக் கொண்டது. டோனி, ரெய்னா, ஜடேஜா, அஸ்வின், பிராவோ, (சென்னை)...

நியூசி., மண்ணில் சாதிக்குமா இந்தியா?

அன்னிய மண்ணில் வெற்றி வாகை சூடும் இலக்குடன் தோனி தலைமையிலான இந்திய அணி வீரர்கள், நேற்று நியூசிலாந்துக்கு புறப்பட்டுச் சென்றனர். நியூசிலாந்துக்கு எதிராக இந்திய அணி 5 ஒருநாள், 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் ஒருநாள் போட்டி வரும் 19ல் நேப்பியரில் துவங்குகிறது. டெஸ்ட் தொடருக்கு முன் இரண்டு நாள் (பிப்., 2,3) பயிற்சி போட்டியிலும் இந்திய அணி விளையாடுகிறது. இத்தொடரில் பங்கேற்கும் 16 பேர் கொண்ட இளம் இந்திய அணி நேற்று மும்பையில்...

கபில்தேவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் கபில் தேவுக்கு, வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில், ஆண்டுதோறும், சி.கே. நாயுடு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படும். இவ்விருதுக்கு இம்முறை கபில் தேவ் தேர்வு செய்யப்பட்டார். நேற்று மும்பையில் நடந்த விழாவில் இவருக்கு, விருதுடன் ரூ. 25 லட்சம் பரிசு வழங்கப்பட்டது.  கடந்த 1983ல் இந்தியாவுக்கு முதன்முறையாக உலக கோப்பை (50 ஓவர்) வென்று தந்த கபில், 131...

7-வது IPL - ஷேவாக்கை கழற்றி விட்டது டெல்லி அணி

ஏழாவது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியையொட்டி டெல்லி அணி எந்த வீரரையும் தக்க வைத்துக் கொள்ள விரும்பவில்லை என்று கூறிவிட்டது. இதன் மூலம் ஷேவாக் முதல் முறையாக பகிரங்க ஏலத்திற்கு வருகிறார். 7-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் ஏலம் அடுத்த மாதம் (பிப்ரவரி) 12-ந்தேதி பெங்களூரில் நடைபெறுகிறது. தேவைப்பட்டால் பிப்.13-தேதியும் ஏலம் தொடரும். இதில் அனைத்து வீரர்களும் புதிதாக விற்கப்படுகிறார்கள். அதே நேரத்தில் ஒவ்வொரு அணிகளும் முந்தைய சீசனில்...

வருகிறது 7 ஓவர் கிரிக்கெட்

கிரிக்கெட்டில் விறுவிறுப்பை அதிகரிக்க, 7 ஓவர்கள் கொண்ட "செவன் ஸ்டார் லீக்' தொடர் விரைவில் அரங்கேற உள்ளது. மந்தமான டெஸ்ட் போட்டிகளால் வெறுத்துப் போன ரசிகர்களுக்கு ஒருநாள் (50 ஓவர்) போட்டி உற்சாகம் தந்தது. பின் அதிரடியான "டுவென்டி–20' போட்டி பெரும் வரவேற்பை பெற்றது.  தூதுவர் தோனி: இந்த வரிசையில், 7 ஓவர்கள் கொண்ட புதுமையான "செவன் ஸ்டார்' லீக் தொடர் துபாயில் நடக்க உள்ளது. இதற்கு ஐ.சி.சி., இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,)...

இந்தியாவுக்கு நியூசிலாந்து மண்ணில் புது நெருக்கடி

நியூசிலாந்தில் வீசும் பலத்த காற்று இந்திய வீரர்களுக்கு பெரும் தொல்லையாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய வீரர்கள் உள்ளூரில் புலி தான். அன்னிய மண் என்று வந்து விட்டால், அவ்வளவு தான். எவ்வளவு அடி கொடுத்தாலும் வாங்கிக் கொண்டு திரும்புவர்.  கடந்த 2011ல் இங்கிலாந்து (0-4), 2011-12ல் ஆஸ்திரேலியா (0-4), 2013ல் தென் ஆப்ரிக்கா (0-1) என, பங்கேற்ற பங்கேற்ற 10 டெஸ்டில், 9ல் தோல்வியடைந்தது. ஒரு டெஸ்ட் போட்டியை (2013, ஜோகனஸ்பர்க்)...

தோனியுடன் காம்பிர் மோதலா?

எனக்கும், கேப்டன் தோனிக்கும் இடையில் ஏற்பட்ட விரிசல் தான் அணியில் சேர்க்கப்படாததற்கு காரணம் என்ற செய்தியில் உண்மையில்லை,’’ என, காம்பிர் தெரிவித்தார்.       இந்திய அணியின் துவக்க வீரர் காம்பிர், 32. இதுவரை 54 டெஸ்ட் (4,021 ரன்கள்), 147 ஒருநாள் (5,238) மற்றும் 37 ‘டுவென்டி-20’ (937) பங்கேற்றுள்ளார். கடைசியாக 2012, டிச.,ல் இங்கிலாந்துக்கு எதிரான் நாக்பூர் டெஸ்ட் போட்டிக்குப் பின் அணியில் இருந்து நீக்கப்பட்டார்.         இவர்,...

சென்னை அணியில் டாப் 5 வீரர்கள் யார்?

ஏழாவது பிரிமியர் கிரிக்கட் தொடருக்கான வீரர்கள் ஏலம், வரும் பிப்., 12, 13ல் நடக்கவுள்ளது.  இதற்கு முன் ஒவ்வொரு அணி நிர்வாகமும், எந்தெந்த வீரர்களை தக்க வைக்கின்றன என்ற விவரத்தை, ஜன.,10ம் தேதிக்குள் வெளியிட வேண்டும்.  இதன்படி, சென்னை அணியில் கேப்டன் தோனி நீடிப்பது உறுதி. 2010, 2011ல் சென்னை அணி சாதிக்க முக்கிய காரணமாக இருந்த அஷ்வின், ‘ஆல் ரவுண்டர்’ ரவிந்திர ஜடேஜா, ரெய்னாவும் அணியில் இருக்கலாம்.  கடந்த தொடரில் 18 போட்டிகளில்...