வாழ்க்கையில் கனவு காணுங்கள் - சச்சின்

கனவுகள் இல்லாத வாழ்க்கை சுவையற்றது. கனவு காண்பது மிகவும் முக்கியம்,''என, சச்சின் தெரிவித்துள்ளார்.


கிரிக்கெட் உலகின் சாதனை நாயகனாக திகழ்கிறார் இந்தியாவின் சச்சின் (37). ஒருநாள் (17,598), டெஸ்ட் (14,240) என இரண்டிலும் அதிக ரன்களை குவித்து முதலிடத்தில் உள்ளார். இந்த ஆண்டு இவருக்கு சிறப்பானதாக அமைந்துள்ளது. கடந்த பிப்ரவரியில் தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் சதம், ஒருநாள் போட்டியில் இரட்டை சதம், ஐ.பி.எல்., தொடரில் அதிக ரன்கள் மற்றும் இலங்கைக்கு எதிராக இரட்டை சதம் அடித்து அசத்தினார்.

சமீபத்தில் முடிந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில், டெஸ்ட் கிரிக்கெட்டில் 14 ஆயிரம் ரன்களை கடந்து சாதித்தார். கடந்த 2002க்குப் பின் மீண்டும் சர்வதேச டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் வரிசையில் முதலிடத்தை பிடித்தார். ஐ.சி.சி.,யின் சிறந்த வீரர் விருது, இரண்டு ஆசிய விருதுகளை பெற்றார். இப்படி அசத்திக் கொண்டிருந்தாலும், இன்னும் சாதிக்க வேண்டியது அதிகம் உள்ளது என்கிறார் சச்சின். முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் வழியில், கனவுகள் காண வேண்டும் என்கிறார்.


இது குறித்து லண்டன் பத்திரிகை ஒன்றுக்கு சச்சின்


அளித்த பேட்டி:கனவுகள் இல்லாத வாழ்க்கை சுவையற்றதாக இருக்கும். கனவுகள் மிக முக்கியமானவை. ஏனெனில் கனவுகள் இருந்தால் தான், அவற்றை நாம் அடைய முடியும். இந்த கனவுகள் தான் என்னை கடினமாக உழைக்க தூண்டுகிறது.

கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணியின் பயிற்சியாளர் கிறிஸ்டனுடன் இணைந்து, எனது பேட்டிங்கிற்காக கடும் பயிற்சி எடுத்து வருகிறேன். இவரது உதவியில் தான், பேட்டிங்கில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. சுதந்திரமாக விளையாட அனுமதிக்கும் அவர், எப்போதாவது சோர்வடைவது போல தெரிந்தால், சிறப்பாக விளையாட தூண்டுவார். கிறிஸ்டன் பயிற்சியாளர் என்பதை விட நல்ல நண்பர் எனலாம்.


எனது அதிர்ஷ்டம்:கடந்த 2005-2006ல் ஆஸ்திரேலியாவின் சாப்பல், என்னை ஓய்வு பெறுமாறு கூறினார். அது அவர் எனக்கு அளித்த "டிப்ஸ்' எனலாம். ஏனெனில் அப்போது விரல், முழங்கை, இடுப்பு என பல வகையிலும் காயத்தால் அவதிப்பட்டேன். அனைத்துமே எனது உடலில் ஏற்பட்ட காயங்கள் தான். இப்போது அவை எல்லாம் மாறி, ஒருமணி நேரம் பயிற்சி செய்ய வேண்டிய தேவை என்றாலும், என்னால் முடிகிறது.இது எனது அதிர்ஷ்டம் தான்.

போட்டிகளில் அபாரமாக செயல்பட விரும்பும் நான், தொடர்ந்து நிலையான மற்றும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவது எப்படி, சிறந்த போட்டியாளராக இருப்பது எப்படி, பேட்டிங்கில் அடுத்த கட்டத்துக்கு செல்வது எப்படி என கவனம் செலுத்தி வருகிறேன்.

பெரிய எதிர்பார்ப்பு: இந்தியாவில் அடுத்த ஆண்டு நடக்க உள்ள உலக கோப்பை தொடர் பற்றி தான் எல்லோரும் பேசுகின்றனர். ரசிகர்களுக்கு எங்கள் மீது எதிர்பார்ப்பு வைக்க உரிமை உள்ளது. எனது சொந்த ஊரான மும்பையில் தான் பைனல் என்பதால், பெரிய அளவில் நம்பிக்கை வைத்துள்ளனர். கோப்பை கைப்பற்ற நிச்சயமாக பாடுபடுவோம்.
இவ்வாறு சச்சின் தெரிவித்தார்.


கிரிக்கெட் மாணவன்

கிரிக்கெட்டில் வியத்தகு சாதனைகள் புரிந்தாலும், தான் இன்னும் மாணவன் தான் என்கிறார் சச்சின். இதுகுறித்து அவர் கூறுகையில்,""என்னுடைய ஆட்டம் மகிழ்ச்சி தருகிறது. ஆனாலும் முழு திருப்தி தரவில்லை. இன்னும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். கிரிக்கெட்டில் தொடர்ந்து மாணவனாக இருக்கவே விரும்புகிறேன். அப்போது தான் முன்னேற வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும்,'' என்றார்.

1 comments:

  1. வாழ்க்கையில் கனவு காணுங்கள் - சச்சின்
    ??????

    *******************************************

    கனவு காணுங்கள்- கலாம்

    ♫Best wishes♫

    ReplyDelete