லண்டனில் சச்சினுக்கு விருது

லண்டனில் நடைபெற்ற ஆசிய விருது வழங்கும் விழாவில் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு மக்கள் தேர்வு விருது வழங்கப்பட்டது.

திரைப்படம், விளையாட்டு, வர்த்தகம் என பல்வேறு பிரிவுகளில் முதலாவது ஆசிய விருது வழங்கும் விழா லண்டனில் புதன்கிழமை நடைபெற்றது. லெபாரா நிறுவனம் இந்த விருதுகளை வழங்கியது.

லெபாரா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ரத்தீசன் யோகநாதன் இந்த விருதை சச்சினுக்கு வழங்கினார்.

விழாவில் அவர் கூறியதாவது: கிரிக்கெட்டில் சச்சின்தான் ஹீரோ. கோடிக்கணக்கான இந்திய இளைஞர்களின் முன்மாதிரியாக சச்சின் உள்ளார். மிகச் சிறந்த கிரிக்கெட் வீரர்களில் சச்சினும் ஒருவர்.

எதிர்கால சந்ததியினருக்கு தூண்டுகோலாக இருக்கிறார் சச்சின் என்றார் அவர்.

நடிகர் அமிதாப், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், தொழிலதிபர் விஜய் மல்லையா, திரைப்படத் தயாரிப்பாளர் யஷ் சோப்ரா ஆகியோருக்கும் விருது வழங்கப்பட்டது. 2010ம் ஆண்டுக்கான ஐ.சி.சி. மக்கள் தேர்வு விருதும் சச்சினுக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது

0 comments:

Post a Comment