தீர்ப்புக்கு எதிர்ப்பு: ரெய்னாவுக்கு அபராதம்

பார்படாஸ் டெஸ்டில் அம்பயர் வழங்கிய தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த ரெய்னாவுக்கு அபராதம விதிக்கப்பட்டுள்ளது.

பார்படாஸ் டெஸ்டில் பிஷூ பந்தை எதிர்கொண்ட ரெய்னா, "கேட்ச்' ஆனதாக அம்பயர் அறிவித்தார். இதை ஏற்று உடனடியாக வெளியேறாமல், இவர் தனது எதிர்ப்பை தெரிவித்தார்.

இது ஐ.சி.சி., விதிமுறையை(2.1.3) மீறிய செயல் என்பதால், ரெய்னாவுக்கு போட்டிக்கட்டணத்தில் 25 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது.

இதுகுறித்து "மேட்ச் ரெப்ரி' கிறிஸ் பிராட் கூறுகையில்,"" அம்பயர் அவுட் கொடுத்தவுடன், பந்து பேட்டில் படவில்லை என்று மறுப்பு தெரிவித்தார் ரெய்னா.

பின் வானத்தை பார்த்த அவர், மீண்டும் தலையசைத்துக் கொண்டே வெளியேறினார். இவரது இந்தச் செயல் ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல.

இது கிரிக்கெட் விதிகளை மீறிய செயல் என்பதால் அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது,'' என்றார்.

0 comments:

Post a Comment