சூதாட்ட தொடர்பு: ரெய்னா மறுப்பு

சூதாட்ட கும்பலுக்கும், தனக்கு தொடர்பு என்ற செய்தி முட்டாள்தனமானது,'' என, இந்திய அணியின் கேப்டன் ரெய்னா மறுப்பு தெரிவித்தார்.

பத்தாவது உலக கோப்பை தொடர் இந்தியாவில் சமீபத்தில் நடந்தது. இத்தொடரின் போது இந்திய வீரர் ரெய்னா, ஷீரடி கோயிலுக்கு சென்றார். அப்போது சிலருடன் ரெய்னா, போட்டோ எடுத்துக்கொண்டார்.

இதையடுத்து அந்த போட்டோவில் உள்ள நபருடன் தொடர்புபடுத்தி, ரெய்னாவுக்கு சூதாட்ட கும்பலுடன் தொடர்புள்ளது என, சில "டிவி' சானல்கள் செய்தி வெளியிட்டன.

இந்த செய்திக்கு தற்போதைய இந்திய அணியின் கேப்டனாக உள்ள ரெய்னா, கடுமையாக மறுத்துள்ளார்.


இதுகுறித்து அவர் கூறியது:

வெவ்வேறு இடங்களுக்கு செல்லும் போது, பலர் என்னுடன் இணைந்து போட்டோ எடுத்துக்கொள்ள ஆசைப்படுகின்றனர். இதுபோன்று எத்தனையோ பேர் போட்டோ எடுத்துள்ளனர். ஆனால் அவர்கள் எல்லாம் யார், யார் என்று எனக்குத் தெரியாது. நானும் யார் என்று பார்த்துக்கொண்டு இருப்பதில்லை.

இந்நிலையில் எனக்கும் சூதாட்ட கும்பலுக்கும் தொடர்பு என்று செய்திகள் வெளியிடுவது முட்டாள்தனமானது. தவிர, அன்றைய தினம் நான் எனது மானேஜருடன் தான் கோயிலுக்கு சென்றிருந்தேன்.

இவ்வாறு ரெய்னா தெரிவித்தார்.

0 comments:

Post a Comment