தோனிக்கு பாராட்டு விழா

உலக கோப்பை வென்ற இந்திய அணியின் கேப்டன் தோனி மற்றும் 34வது தேசிய விளையாட்டு போட்டியில் வென்றவர்களுக்கு, விரைவில் பாராட்டு விழா நடக்கவுள்ளது.

சமீபத்தில் நடந்த உலக கோப்பை தொடரில் கேப்டன் தோனி தலைமையிலான இந்திய அணி, சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.

இதனால் அவரது சொந்த மாநிலமான ஜார்க்கண்ட் அரசு சார்பில், விரைவில் பாராட்டு விழா நடத்தப்படுகிறது. இதுகுறித்து மாநில துணை முதல்வர், விளையாட்டுத் துறை அமைச்சர் சுதேஷ் மகத்தோ கூறியது:

உலக கோப்பை வென்ற கேப்டன் தோனி, 34வது தேசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற வீரர்களால் ஜார்க்கண்ட் மாநிலத்துக்கு பெருமை கிடைத்துள்ளது.

இவர்களை கவுரவிக்க முடிவு செய்துள்ளோம். சிறப்பாக நடக்கவுள்ள இந்த விழாவில், வீரர்களுக்கு மற்ற மாநிலங்கள் கொடுத்த பரிசுகளை விட அதிகமாக கொடுக்கவுள்ளோம்.

இதற்கான ஏற்பாடுகளை செய்ய, அந்தந்த துறைகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். ஆனால் பாராட்டு விழா இந்த மாதம் நடக்காது. தோனியின் முடிவை பொறுத்து, விழாவுக்கான தேதி முடிவாகும்.

இவ்வாறு சுதேஷ் மகத்தோ கூறினார்.

0 comments:

Post a Comment