சென்னையில் சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20

டுவென்டி-20' கிரிக்கெட் தொடருக்கான போட்டிகள் சென்னை, பெங்களூரு, கோல்கட்டாவில் உள்ள மைதானங்களில் நடக்கவுள்ளது.

இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்ரிக்க கிரிக்கெட் போர்டுகள் இணைந்து, சர்வதேச அளவில் உள்ளூர் போட்டிகளில் சாதித்த அணிகளுக்கு இடையிலான சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20' கிரிக்கெட் தொடரை ஆண்டுதோரும் நடத்துகின்றன. மூன்றாவது சாம்பியன்ஸ் லீக் தொடர் செப்.23ம் தேதி முதல் அக்.9ம் தேதி வரை இந்தியாவில் நடக்கிறது.


சென்னையில் பைனல்:

இப்போட்டிகள் அனைத்தும் சென்னை, பெங்களூரு, கோல்கட்டா உள்ளிட்ட மூன்று முக்கிய நகரங்களில் உள்ள மைதானங்களில் நடக்கவுள்ளது. பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் வரும் செப்.23ம் தேதி தொடரின் முதல் போட்டி நடக்கவுள்ளது. தவிர இங்கு, ஒரு அரையிறுதிப் போட்டியும் நடக்கவுள்ளது. சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் அக்.9ம் தேதி பைனல் நடக்கவுள்ளது. இங்கு, ஒரு அரையிறுதிப் போட்டியும் நடக்கிறது.


தகுதிச் சுற்று:

இத்தொடரில் 13 அணிகள் பங்கேற்க உள்ளன. ஏழு அணிகள் நேரடியாக சாம்பியன்ஸ் லீக் தொடருக்கு தகுதி பெற்றுவிட்டன. மீதி அணிகளுக்கு, தகுதிச் சுற்று நடத்தப்படும். முதல் மூன்று இடங்களை பிடிக்கும் அணிகள் மட்டுமே, சாம்பியன்ஸ் லீக் தொடரில் பங்கேற்க முடியும்.

இதன்மூலம் 10 அணிகள் (நேரடி 7 + தகுதிச் சுற்று 3) இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் சுற்று நடத்தப்படும். ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.


கோல்கட்டா வாய்ப்பு:

சமீபத்தில் நடந்த நான்காவது ஐ.பி.எல்., தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ், இரண்டாவது இடம் பிடித்த பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ், மூன்றாவது இடம் பிடித்த மும்பை இந்தியன்ஸ், சவுத் ஆஸ்திரேலியன் ரெட்பேக்ஸ் (ஆஸ்திரேலியா), நியூ சவுத் வேல்ஸ் புளூ (ஆஸ்திரேலியா), வாரியர்ஸ் (தென் ஆப்ரிக்கா), கேப் கோப்ரா (தென் ஆப்ரிக்கா) உள்ளிட்ட ஏழு அணிகள் நேரடியாக தகுதி பெற்றுவிட்டன.

நான்காவது ஐ.பி.எல்., தொடரில் நான்காவது இடம் பிடித்த கோல்கட்டா நைட்ரைடர்ஸ், ஆக்லாந்து ஆசஸ் (நியூசிலாந்து), டிரினிடாட் அன்ட் டுபாகோ (வெஸ்ட் இண்டீஸ்), இங்கிலாந்து கவுன்டி சாம்பியன் மற்றும் இரண்டாவது இடம் பிடிக்கும் அணிகள், இலங்கையில் நடக்கும் "டுவென்டி-20' சாம்பியன் உட்பட ஆறு அணிகள் தகுதிச் சுற்றில் மோத உள்ளன. இப்போட்டிகள் செப்.19-21ம் தேதிகளில் ஐதராபாத்தில் நடக்கவுள்ளது.

இத்தொடருக்கான முழு அட்டவணை, விரைவில் வெளியிடப்படும் என சாம்பியன்ஸ் லீக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

0 comments:

Post a Comment