இந்திய பவுலர்கள் பதிலடி

பார்படாஸ் டெஸ்டில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் பதிலடி கொடுத்தனர். பேட்டிங்கில் லட்சுமண்(85) கைகொடுத்தார்.மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க, இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ளது. முதல் டெஸ்டில் வென்ற இந்திய அணி, 1-0 என முன்னிலையில் உள்ளது. இரு அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் பார்படாசில் நடக்கிறது. "சூப்பர் ஜோடி:முதல் இன்னிங்சை துவக்கிய இந்திய அணிக்கு, வெஸ்ட் இண்டீஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் பெரும் தொல்லை...

தீர்ப்புக்கு எதிர்ப்பு: ரெய்னாவுக்கு அபராதம்

பார்படாஸ் டெஸ்டில் அம்பயர் வழங்கிய தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த ரெய்னாவுக்கு அபராதம விதிக்கப்பட்டுள்ளது.பார்படாஸ் டெஸ்டில் பிஷூ பந்தை எதிர்கொண்ட ரெய்னா, "கேட்ச்' ஆனதாக அம்பயர் அறிவித்தார். இதை ஏற்று உடனடியாக வெளியேறாமல், இவர் தனது எதிர்ப்பை தெரிவித்தார். இது ஐ.சி.சி., விதிமுறையை(2.1.3) மீறிய செயல் என்பதால், ரெய்னாவுக்கு போட்டிக்கட்டணத்தில் 25 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது. இதுகுறித்து "மேட்ச் ரெப்ரி' கிறிஸ் பிராட் கூறுகையில்,"" அம்பயர் அவுட்...

புதிய வரலாறு படைக்குமா இந்தியா?

இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று பார்படாசில் துவங்குகிறது. கடந்த 58 ஆண்டுகளாக பார்படாஸ் மண்ணில் இந்திய அணி வென்றதில்லை. இந்த சோகத்துக்கு தோனி தலைமையிலான அணி முற்றுப்புள்ளி வைத்து, புதிய வரலாறு படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் வென்ற இந்திய அணி, 1-0 என முன்னிலையில் உள்ளது. இரு அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட்,...

"வால்' ஆடினால் "தலை' நிமிரும் இந்தியா

டெஸ்ட் அரங்கில் இந்திய அணியின் சமீபத்திய எழுச்சிக்கு "டெயிலெண்டர்கள்' முக்கிய காரணம். ஹர்பஜன், இஷாந்த் சர்மா, அமித் மிஸ்ரா உள்ளிட்டோர் கடைசி கட்டத்தில் கைகொடுக்கின்றனர். இவர்களது அசத்தல் ஆட்டம் வெஸ்ட் இண்டீஸ் மண்ணிலும் நீடிப்பதால், கேப்டன் தோனி மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்.டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவின் வெற்றிநடை தொடர்கிறது. கடந்த 22 போட்டிகளில் 12 வெற்றி, 7 "டிரா' மற்றும் 3 தோல்விகளை சந்தித்துள்ளது. இதன் காரணமாக டெஸ்டில் தோனி தலைமையிலான நமது...

சச்சின் விளையாடுவதை பார்க்க வேண்டும்

கிரிக்கெட்டின் சிறந்த வீரர் சச்சின், விளையாடுவதை நேரில் பார்க்க வேண்டும். இது தான் எனது கனவாக உள்ளது,'' என, 100 மீ., உலக சாம்பியன் உசைன் போல்ட் விருப்பம் தெரிவித்துள்ளார்.உலக கிரிக்கெட்டில் எண்ணற்ற சாதனைகள் படைத்து வருபவர் இந்திய மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின். இதேபோல, தடகள உலகில் சாதனை வீரராக இருப்பவர் ஜமைக்காவின் உசைன் போல்ட். "மின்னல் மனிதன்' என்றழைக்கப்படும் இவர் 100 மீ., ஓட்டத்தை 9.58 வினாடியில் கடந்து, உலக சாதனை படைத்துள்ளார். தவிர, ஒலிம்பிக் மற்றும்...

நழுவியது நம்பர்-1

ஐ.சி.சி., டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான ரேங்கிங் பட்டியலில், இந்திய "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின் "நம்பர்-1' இடத்தை இழந்தார்.டெஸ்ட் அரங்கில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான ரேங்கிங் (தரவரிசை) பட்டியலை, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) துபாயில் நேற்று வெளியிட்டது. இதில், வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்காததால், இந்திய "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின் (873 புள்ளி), "நம்பர்-1' இடத்தை இழந்தார். இதன்மூலம் தென் ஆப்ரிக்க "ஆல்-ரவுண்டர்' காலிஸ்...

இங்கிலாந்து தொடருக்கு தயார் - யுவராஜ்

தற்போது 100 சதவீதம் குணமடைந்துள்ளேன். எதிர்வரும் இங்கிலாந்து எதிரான தொடருக்கு தயாராக உள்ளேன்,'' என, இந்திய வீரர் யுவராஜ் தெரிவித்துள்ளார்.கடந்த உலககோப்பை தொடரில் 362 ரன்கள் எடுத்து, 15 விக்கெட் வீழ்த்திய யுவராஜ் சிங், சுவாச தொற்று காரணமாக வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்கவில்லை. இது குறித்த யுவராஜ் சிங் கூறியது:உலக கோப்பை தொடருக்கு முன்பாக, காயம் காரணமாக அணியில் இருந்து நீக்கப்பட்டது மிகவும் வருத்தமாக இருந்தது. இந்த காலம் தான் எனது வாழ்வின்...

பலன் தந்த சீனியர்கள் ஆலோசனை

பேட்டிங்கின் போது, "ஷார்ட் பிட்ச்' பந்துகளை எதிர்கொள்வது குறித்து, டிராவிட் உள்ளிட்ட சீனியர் வீரர்கள் தந்த ஆலோசனை, நல்ல பலனை தந்தது,'' என, இந்திய வீரர் ரெய்னா தெரிவித்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்தியா, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் கிங்ஸ்டன் ஜமைக்காவில் நடக்கிறது. இதன் முதல் இன்னிங்சில் இந்திய வீரர் ரெய்னா, 82 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்த உதவினார். ரெய்னா கூறியது:டெஸ்ட் போட்டிகளில் ரன்கள் எடுப்பது...

சென்னையில் சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20

டுவென்டி-20' கிரிக்கெட் தொடருக்கான போட்டிகள் சென்னை, பெங்களூரு, கோல்கட்டாவில் உள்ள மைதானங்களில் நடக்கவுள்ளது.இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்ரிக்க கிரிக்கெட் போர்டுகள் இணைந்து, சர்வதேச அளவில் உள்ளூர் போட்டிகளில் சாதித்த அணிகளுக்கு இடையிலான சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20' கிரிக்கெட் தொடரை ஆண்டுதோரும் நடத்துகின்றன. மூன்றாவது சாம்பியன்ஸ் லீக் தொடர் செப்.23ம் தேதி முதல் அக்.9ம் தேதி வரை இந்தியாவில் நடக்கிறது. சென்னையில் பைனல்:இப்போட்டிகள் அனைத்தும்...

இந்திய வீரர்களுக்கு அதிரடி தடை

இலங்கை பிரிமியர் லீக் தொடரில் பங்கேற்க அஷ்வின், இர்பான் பதான், முனாப் படேல் உள்ளிட்ட 12 இந்திய வீரர்களுக்கு பி.சி.சி.ஐ., அதிரடியாக தடை விதித்துள்ளது. இலங்கையில் வரும் ஜூலை 19 முதல் ஆகஸ்ட் 4ம் தேதி வரை இலங்கை பிரிமியர் லீக்(எஸ்.எல்.பி.எல்.,) "டுவென்டி-20' தொடர் நடக்க உள்ளது. இதில், கெய்ல்(வெ.இண்டீஸ்), அப்ரிதி(பாக்,,), வெட்டோரி(நியூசி.,) போன்ற வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர். இந்தியா சார்பில் அஷ்வின், தினேஷ் கார்த்திக், இர்பான் பதான், முனாப் படேல்,...

தேவையா டி.ஆர்.எஸ்., முறை

தற்போதைய டி.ஆர்.எஸ்., முறை நம்பிக்கை இல்லாதது. இதுகுறித்த தங்களது முடிவில் எந்த மாற்றமும் இல்லை,'' என, இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) உறுதியாக தெரிவித்துள்ளது.சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில், அம்பயர் தீர்ப்பு மறுபரிசீலனை (டி.ஆர்.எஸ்.,) முறை கொண்டு வரப்பட்டது. இதை துவக்கத்தில் இருந்தே பி.சி.சி.ஐ., எதிர்த்து வருகிறது. இந்திய அணி கேப்டன் தோனியும் இதை எதிர்த்து வருகிறார்.ஆனால், இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் கிறிஸ்டன்,...

கேள்விக்குறியானது கெயிலின் எதிர்காலம்?

கடந்த மாதம் வானொலிக்கு அளித்த பேட்டியில் கிரிக்கெட் வாரியம் குறித்து சில கருத்துகளை கெயில் கூறியிருந்தார். அவரது கருத்துகளால் கோபமடைந்த கிரிக்கெட் வாரியம், இந்தியாவுக்கு எதிரான ஒரு தினத் தொடரில் அவருக்கு இடம் அளிக்கவில்லை.மேற்கிந்தியத் தீவுகள் அணிக்காக அதிரடி வீரர் கிறிஸ் கெயில் விளையாடுவது கேள்விக்குறியாகி உள்ளது.இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் ஜூன் 20-ல் தொடங்க உள்ளது. டெஸ்ட் தொடரில் அவர் இடம்பெறுவது தொடர்பாக இருதரப்புக்கும் இடையேயான கூட்டம்...

பதிலடி கொடுக்குமா இளம் இந்தியா

இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது ஒருநாள் போட்டி கிங்ஸ்டன் நகரில் இன்று நடக்கிறது. கடந்த போட்டியில் சந்தித்த தோல்விக்கு இம்முறை இந்திய அணி பதிலடி கொடுக்க தயாராக உள்ளது.வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள ரெய்னா தலைமையிலான இளம் இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் நான்கு போட்டிகளின் முடிவில் இந்திய அணி 3-1 என தொடரை கைப்பற்றி முன்னிலை வகிக்கிறது. ஐந்தாவது மற்றும் கடைசி போட்டி கிங்ஸ்டன் நகரில் இன்று நடக்கிறது.ரோகித்...